<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D</id>
	<title>ஆவியர் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-02T11:52:08Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=268995&amp;oldid=prev</id>
		<title>00:15, 7 அக்டோபர் 2021 இல் imported&gt;Krishnamurthy GovindaReddy</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=268995&amp;oldid=prev"/>
		<updated>2021-10-07T00:15:01Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;#039;&amp;#039;&amp;#039;ஆவியர்&amp;#039;&amp;#039;&amp;#039; என்போர் சங்க காலக் குடிமக்களில் ஒரு சாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. &amp;lt;ref&amp;gt;திருமுருகாற்றுப்படை 176&amp;lt;/ref&amp;gt; ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.&amp;lt;ref&amp;gt;ஆ+இன+நன்+குடி&amp;lt;/ref&amp;gt; இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை, வீரம்,  பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம். &lt;br /&gt;
&lt;br /&gt;
இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். [[முருகன் (அரசன்)|முருகன் நற்பேர் ஆவி]] என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். &amp;lt;ref&amp;gt;அகநானூறு 1&amp;lt;/ref&amp;gt; வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொரு பகுதி. இப்பகுதி அரசன் வையாவிக்கோ என்றும், வையாவிக்கோமான் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். [[பேகன்|வையாவிக்கோப் பெரும்பேகன்]] &amp;lt;ref&amp;gt;பெருங்குன்றூர் கிழார் – புறம் 147,&amp;lt;/ref&amp;gt; &amp;lt;ref&amp;gt;அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகன் - சிறுபாணாற்றுப்படை 85-86&amp;lt;/ref&amp;gt; [[பதுமன்|வேளாவிக்கோமான் பதுமன்]] ஆகியோர் இப்பகுதியை ஆண்ட மன்னர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
பதிற்றுப்பத்து நான்காம் பத்தின் பாட்டுடைத் தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல். இவனது தந்தை இரண்டாம் பத்தின் தலைவன் சேரலாதன். தாய் வேளாவிக்கோமான் பதுமன் என்பானின் தேவி. &amp;lt;ref&amp;gt;பதிற்றுப்பத்து பதிகம் 4&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
பதிற்றுப்பத்து ஆறாம் பத்தின் தலைவன் ஆடுகோடுபாட்டுச் சேரலாதன். இவனது தந்தை குடக்கோ நெடுஞ்சேரலாதன். தாய் வேளாவிக் கோமான் என்பவனின் தேவி.&amp;lt;ref&amp;gt; பதிற்றுப்பத்து பதிகம் 6&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
தேவி என்னும் சொல்லைச் சங்கப் பாடல்களைத் தொகுத்தவர்கள் அரசன் மகள் இளவரசியைக் குறிக்கும் வகையில் இங்கு பயன்படுத்தியுள்ளனர்.&amp;lt;ref&amp;gt; பதிற்றுப்பத்து பதிகம் 4&amp;lt;/ref&amp;gt; இச்சொல்லை மனைவியைக் குறிக்கப் பயன்படுத்தும்போது [[பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு]] என்று விளங்கும் வகையில் குறிப்பிட்டுள்ளனர். கோப்பெருந்தேவி என்று பாண்டியன் மனைவியைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. &amp;lt;ref&amp;gt;வழக்குரை காதை&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==அடிக்குறிப்பு==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க காலச் சமூகம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:ஆவியர்|*]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Krishnamurthy GovindaReddy</name></author>
	</entry>
</feed>