<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2409%3A40F4%3A3141%3ABFA5%3A4676%3A7008%3AD27F%3A2703</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2409%3A40F4%3A3141%3ABFA5%3A4676%3A7008%3AD27F%3A2703"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2409:40F4:3141:BFA5:4676:7008:D27F:2703"/>
	<updated>2026-06-02T15:39:24Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88&amp;diff=457704</id>
		<title>மணியம்மை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88&amp;diff=457704"/>
		<updated>2025-05-22T16:11:37Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2409:40F4:3141:BFA5:4676:7008:D27F:2703: 1920&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox revolution biography&lt;br /&gt;
|name           = ஈ. வெ. இரா. மணியம்மை&lt;br /&gt;
|image          = &lt;br /&gt;
|caption        = &lt;br /&gt;
|dateofbirth    = {{birth date|1920|3|10|mf=y}}&amp;lt;ref&amp;gt;{{Cite web|url=http://www.viduthalai.in/component/content/article/97-essay/145520-2017-06-25-10-58-57.html|title=விடுதலை (மணியம்மையார் -தலைநிமிர்ந்த தமிழச்சிகள்)|last=|first=|date=|website=விடுதலை|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
|placeofbirth   = [[வேலூர்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]&lt;br /&gt;
|dateofdeath    = {{death date and age|1978|3|16|1917|3|10}}&lt;br /&gt;
|placeofdeath   = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]&lt;br /&gt;
|alma mater     = வேலூர் உயர்நிலைப் பள்ளி &lt;br /&gt;
|real name = காந்திமதி &amp;lt;br&amp;gt; அரசியல்மணி&lt;br /&gt;
|movement       = [[சுயமரியாதை இயக்கம்]] &lt;br /&gt;
|organizations  = [[திராவிடர் கழகம்]]&lt;br /&gt;
|monuments      =&lt;br /&gt;
|prizes         = &lt;br /&gt;
|religion       = [[இறைமறுப்பு|இறை மறுப்பாளர்]]&lt;br /&gt;
|spouse     = [[ஈ. வெ. இராமசாமி]]&lt;br /&gt;
|influenced     = &lt;br /&gt;
|footnotes      = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;மணியம்மை&#039;&#039;&#039; (&#039;&#039;Maniammai&#039;&#039;, 10 மார்ச் 1920&amp;lt;ref&amp;gt;{{Cite web|url=http://www.viduthalai.in/component/content/article/97-essay/145520-2017-06-25-10-58-57.html|title=விடுதலை (மணியம்மையார் -தலைநிமிர்ந்த தமிழச்சிகள்)|last=|first=|date=|website=விடுதலை|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}&amp;lt;/ref&amp;gt; - 16 மார்ச் 1978) என அறியப்பட்ட &#039;&#039;அரசியல்மணி&#039;&#039;, திராவிடர் கழகத்தின் தலைவராக பதவி வகித்தவர்களுள் ஒருவராவார். இவர் [[ஈ. வெ. இராமசாமி|பெரியாரின்]] மறைவிற்குப் பின்னர் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தின்]] தலைவராக இருந்தவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== இளமைக் காலம்==&lt;br /&gt;
மணியம்மையின் இயற்பெயர் காந்திமதி என்பதாகும் இவர் [[வேலூர்|வேலூரில்]] வாழ்ந்த [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கத்]] தொண்டரான கனகசபை முதலியார்–பத்மாவதி இணையாருக்கு மகளாக [[1917|1920]]ஆம் ஆண்டு [[மார்ச்]] திங்கள் 10 ஆம் நாள் பிறந்தார்.&amp;lt;ref&amp;gt;{{Cite web|title=மணியம்மையின் இயற்பெயர்|url=https://annalthango.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%85/|website=அண்ணல் தாங்கோ வலைத்தளம்|access-date=2019-05-25|archive-date=2019-01-31|archive-url=https://web.archive.org/web/20190131123856/https://annalthango.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%85/|url-status=}}&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தின் திராவிடர் இயக்கத் தலைவர்களில் ஒருவரான &#039;&#039;&#039;அண்ணல்தங்கோ&#039;&#039;&#039;, இவருக்கு &#039;&#039;&#039;அரசியல்மணி&#039;&#039;&#039; எனப் பெயர்சூட்டினார்.&amp;lt;ref&amp;gt;இறையன், அ, பக். 152&amp;lt;/ref&amp;gt;  அரசியல்மணி வேலூரில் உயர்நிலைப் பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் தமிழிலக்கியம் படித்துப் புலவர் பட்டம் பெற்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஈ. வெ. இரா.வின் தொண்டர் ==&lt;br /&gt;
[[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா]], “எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் கூட இருந்து உதவிசெய்ய யாரும் இல்லை. என்னமோ என் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்” என வேலூர் கனகசபைக்கு [[1943]] ஆம் ஆண்டில் கடிதம் எழுதினார்.  அக்கடிதத்தைப் படித்த கனகசபை தனக்கு மகளான அரசியல்மணியை அழைத்துவந்து, “இந்தப் பெண் உங்கள்கூட இருந்து, உங்களைப் பார்த்துக்கொள்வார்” எனக் கூறி விட்டுச்சென்றார்.&amp;lt;ref&amp;gt;இறையன், அ, பக். 6&amp;lt;/ref&amp;gt; அதன் பின்னர், பெரியார்தம் அணுக்கத் தொண்டராக இருந்து அவருக்குத் தேவையான உதவிகளை அரசியல்மணி செய்து வந்தார். அப்பொழுதிலிருந்து திராவிடர் கழகத்தினர் அவரை &#039;&#039;&#039;மணியம்மை&#039;&#039;&#039; என அழைக்கத் தொடங்கினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அண்ணன் மகனான [[ஈ. வெ. கி. சம்பத்|ஈ. வெ. கி. சம்பத்து]] திகழ்வாரெனக் கருதப்பட்டது. ஆனால் அவர், ஈ. வெ. இரா.வின் விருப்பத்திற்கு மாறாகச் [[சுலோசனா சம்பத்|சுலோசனாவை]] மணந்ததார். ஈரோடு வீட்டைவிட்டு வெளியேறிச் சென்னையில் குடியேறினார். ஈ. வெ. இரா. உடன் கருத்து வேறுபாடு கொண்டு விலகியிருந்த [[கா. ந. அண்ணாதுரை|கா. ந. அண்ணாதுரையோடு]] நெருக்கமாக இருந்தார். இதனால் அவர்மீது நம்பிக்கை இழந்த ஈ. வெ. இரா. தன்னுடைய சொந்த சொத்துகளையும் தன்னால் பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளையும் தன் வாரிசாக இருந்து கவனித்துக்கொள்ள சட்டப்படியான ஏற்பாடுகளைச் செய்ய விரும்பினார். எனவே [[1949]]ஆம் ஆண்டு [[ஏப்ரல்]] திங்கள் 9ஆம் நாள் ஈ. வெ. இராமசாமி – மணியம்மை திருமணம் நடந்தது.&amp;lt;ref name=E7&amp;gt;இறையன், அ, பக். 7&amp;lt;/ref&amp;gt;  இதனால் கா. ந. அண்ணாதுரை தலைமையில் திராவிடர் கழக முன்னணித் தலைவர்களில் சிலரும் தொண்டர்கள் பலரும் பிரிந்து சென்று [[1949]] – [[செப்டம்பர் 17]] ஆம் நாள் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தைத்]] தொடங்கினர்.  இத்திருமணத்தால் மணியம்மை பல்வேறு வசவுகளுக்கு ஆளானார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சொற்பொழிவாளர் ==&lt;br /&gt;
[[1944]]ஆம் ஆண்டில் [[சேலம்|சேலத்தில்]] நடந்த திராவிடர் கழக மாநாட்டில் தன்னுடைய முதற் சொற்பொழிவை நிகழ்த்தினார்.&amp;lt;ref name=E8&amp;gt;இறையன், அ, பக். 8&amp;lt;/ref&amp;gt; அதன் பின்னர் தன்னுடைய இறுதிக்காலம் வரை சுயமரியாதை மாநாடு, திராவிடர் கழக மாநாடு, திராவிட மகளிர் மாநாடு உள்ளிட்ட பல கூட்டங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவருடைய சொற்பொழிவுகளில் சில, &#039;&#039;அம்மா பேசுகிறார்&#039;&#039; என்னும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டு உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== எழுத்தாளர் ==&lt;br /&gt;
தமிழிலக்கியத்தில் புலவர் பட்டம் பெற்ற மணியம்மையார் எழுத்தாற்றல் பெற்றவராகவும் விளங்கினார். 1944 ஆம் ஆண்டில் குடியரசு இதழில் இரண்டும் ஒன்றே என்னும் தலைப்பில் [[கந்தபுராணம்|கந்தபுராணத்தையும்]] [[இராமாயணம்|இராமாயணத்தையும்]] ஒப்பாய்வு செய்து கட்டுரை எழுதினார்.&amp;lt;ref name=E8/&amp;gt; இது தவிர திராவிடர் கழகத்தின் அறிக்கைகள், செய்திகள் ஆகியவற்றை எழுதினார். அவை [[குடியரசு (இதழ்)|குடியரசு]], [[விடுதலை (இதழ்)|விடுதலை]], [[உண்மை (இதழ்)|உண்மை]] ஆகிய இதழ்களில் வெளிவந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் ஈ. வெ. இரா.வின் மேடைப்பேச்சுகளைக் குறிப்பெடுத்து கட்டுரைகளாக ஆக்கித் திராவிடர் கழக இதழ்களில் வெளியிட்டார். நூல்களாக அச்சிட்டுப் பரப்பினார்.&amp;lt;ref name=E7/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== களப்பணியும் சிறைவாழ்வும் ==&lt;br /&gt;
[[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா.]]வின் அணுக்கத் தொண்டராகவும் மனைவியாகவும் அவர் சென்ற இடங்களுக்கு எல்லாம் உடன் சென்ற மணியம்மையார், பெரியாரைக் கவனித்துக் கொள்வதோடு களப்பணியிலும் ஈடுபட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[1948]]ஆம் ஆண்டில் [[கும்பகோணம்|குடந்தையில்]] அரசின் தடைச் சட்டத்தை மீறிச் செயற்பட்டு மூன்று திங்கள் சிறையில் இருந்தார்.&amp;lt;ref name=E8/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[1949]]ஆம் ஆண்டில் நடந்த இராண்டாவது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொழுது, சென்னையில் இந்தி எதிர்ப்பு மறியலை முன்னின்று நடத்தினார்.&amp;lt;ref name=E8/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
“இளந்தமிழா புறப்படு போருக்கு” என்னும் கட்டுரை [[1958]]- [[சனவரி 19]]ஆம் நாள் விடுதலை இதழில் வெளிவந்தது. அக்கட்டுரையை வெளியிட்டதற்காக, அவ்விதழின் பதிப்பாளரான மணியம்மையார் கைது செய்யப்பட்டு ஒரு திங்கள் காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.&amp;lt;ref&amp;gt;இறையன், அ, பக். 9-10&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[1974]] – [[ஏப்ரல் 4]]ஆம் நாள் இழிவு ஒழிப்புக் கிளர்ச்சி, தமிழகம் முழுவதும் இருந்த அஞ்சலகங்களின் முன்னர் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது.  [[சென்னை|சென்னையில்]]  நடந்த கிளர்ச்சிக்கு மணியம்மையார் தலைமை தாங்கினார்.&amp;lt;ref&amp;gt;இறையன், அ, பக். 11&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[தில்லி]]யில் [[இராம லீலா|இராமலீலை]] நடத்தி [[இராவணன்]] உருவத்தைக் கொளுத்தும் நிகழ்ச்சியில் இந்தியாவின் அன்றைய குடியரசுத் தலைவர் [[பக்ருதின் அலி அகமது|பக்ருதின் அலி அகமதுவும்]] இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் அன்றைய தலைமை அமைச்சர் [[இந்திரா காந்தி|இந்திரா காந்தியும்]] கலந்துகொள்ளக் கூடாதென [[1974]] – [[அக்டோபர் 26]]ஆம் நாள் மணியம்மையார் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதனைக் கண்டிக்கும் வகையில்   1974 – [[டிசம்பர்|திசம்பர்]] – 25ஆம் நாள் சென்னையில் &#039;&#039;&#039;இராவணன் லீலை&#039;&#039;&#039; திராவிடர் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. மணியம்மையார் அக்கொண்டாட்டத்திற்குத் தலைமை வகித்தார். [[இராமன்]], [[சீதை]], [[இலக்குவன்]] உருவங்களை அவர் தீயிட்டுக் கொளுத்தினார்.&amp;lt;ref&amp;gt;இறையன், அ, பக். 11-12&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[1976]] – [[ஜனவரி|சனவரி]] – 31ஆம் நாள் அறிவிக்கப்பட்ட [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலையின்]] பொழுது மணியம்மையார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.&amp;lt;ref&amp;gt;இறையன், அ, பக். 12&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[1977]] – [[அக்டோபர் 30]]ஆம் நாள் சென்னைக்கு வருகை தந்த அன்றைய இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் இந்திரா காந்திக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய மணியம்மையார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.&amp;lt;ref name=E13&amp;gt;இறையன், அ, பக். 13&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நிர்வாகி ==&lt;br /&gt;
[[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா]] வாழ்ந்த காலத்தில் அவர் [[திருச்சி]] நகரில் உருவாக்கிய கல்வி நிறுவனங்களையும் குழந்தைகள் காப்பகத்தையும் மணியம்மையார் திறம்பட நிர்வகித்தார்.&amp;lt;ref&amp;gt;இறையன், அ, பக். 10&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா.]]வின் மறைவிற்குப் பின்னர் திராவிடர் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.  கட்டுக்கோப்பு சிதைந்துவிடாமல் அதனைக் காத்தார்.  மேலும் அவ்வியக்கத்தின் துணை அமைப்புகளையும் திறம்பட நிர்வகித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மறைவு ==&lt;br /&gt;
1974 ஆம் ஆண்டிலிருந்த உடல்நலம் குன்றியிருந்த மணியம்மையார், [[1978]] – [[மார்ச் 16]] ஆம் நாள் மரணமடைந்தார்.&amp;lt;ref name=E13/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மணியம்மையாரை கௌரவிக்கும் விதமாக [[சென்னை]], [[எழும்பூர்|எழும்பூரில்]] உள்ள ஒரு சாலைக்கு ஈ.வே.ரா மணியம்மை சாலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.&amp;lt;ref name=&amp;quot;இந்து&amp;quot;&amp;gt;{{cite web | url=https://www.hindutamil.in/news/supplements/penn-indru/1101350-chennai-roads-women-show-the-way.html | title=சென்னை சாலைகள் பெண்கள் காட்டும் வழி | publisher=இந்து தமிழ் திசை | accessdate=20 ஆகத்து 2023}}&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
[http://www.penniyam.com/2010/02/blog-post_22.html மணிம்மையார் : ஒரு பெரியாரியப் பெண்ணியப் பார்வை - முழுமதி]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திராவிட அரசியல்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ் இறைமறுப்பாளர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:திராவிட இயக்கத் தலைவர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:1920 பிறப்புகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:1978 இறப்புகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பெரியாரிய அறிஞர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்ப் பெண் சமூகப் போராளிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்திய பகுத்தறிவாளர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பெரியார் ஈ. வெ. இராமசாமி]]&lt;/div&gt;</summary>
		<author><name>2409:40F4:3141:BFA5:4676:7008:D27F:2703</name></author>
	</entry>
</feed>