<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2409%3A40F4%3A1011%3A6459%3A8000%3A0%3A0%3A0</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2409%3A40F4%3A1011%3A6459%3A8000%3A0%3A0%3A0"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2409:40F4:1011:6459:8000:0:0:0"/>
	<updated>2026-06-02T11:45:20Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%89%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF&amp;diff=293267</id>
		<title>உவமையணி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%89%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF&amp;diff=293267"/>
		<updated>2024-02-27T17:09:01Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2409:40F4:1011:6459:8000:0:0:0: தேன் போன்ற தமிழ்&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;[[தமிழ் இலக்கணம்|தமிழிலக்கணத்தில்]], &#039;&#039;&#039;உவமையணி&#039;&#039;&#039; என்பது ஒரு புலவர் தான் பிறருக்குக் கூறக் கருதிய பொருளை அவருக்கு நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது ஆகும்.  ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுபடுத்திக் கூறுவதாம்.&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[புலவர்]] தாம்சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ  பல பொருளுடனோ  அப்பொருளின் [[பண்பு]],[[தொழில்]], [[பயன்]] என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபுபடுத்தி  இரு பொருள்களுக்கும் இடையே உள்ள  ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும். புலவர் விளக்கிக் கூறக் கருதும் பொருள், &#039;பொருள்&#039;அல்லது &#039;[[உவமேயம்]]&#039; எனப்படும். அப்பொருளை விளக்கவோ அழகுபடுத்தவோ அவர் இயைத்துக் கூறும் மற்றொரு பொருள்&#039;உவமை&#039; அல்லது &#039;[[உவமானம்]]&#039; எனப்படும். அவ்விரண்டையும் இணைக்கப் பயன்படுவது [[உவம உருபு]] ஆகும்.&lt;br /&gt;
{{dablink|தொல்காப்பியம் காட்டும் உவமையணி தொடர்புடைய கட்டுரையை [[தொல்காப்பியம் உவமவியல் செய்திகள்]] பக்கத்தில் காணலாம்.}}&lt;br /&gt;
12 -ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் [[தண்டியலங்காரம்]] என்னும் இலக்கண நூல் உவமை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{cquote|பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை}}&lt;br /&gt;
என்ற நூற்பா விளக்குகிறது. தண்டியலங்காரம் குறிப்பிடும் பொருளணிகள் 35 இல் தலைமை அணியாக உவமை அணி அமைவதாலும் இந்த அணியிலிருந்தே பிற அணிகள் தோன்றுவதாலும் இந்த அணியைத் [[தாய் அணி]] என்றும் அழைப்பர் &amp;lt;ref&amp;gt;{{Cite web |url=http://pm.tamil.net//pub/pm0145/tanti.pdf |title=தண்டியலங்காரம், 31 |access-date=2011-11-13 |archive-date=2011-09-16 |archive-url=https://web.archive.org/web/20110916002457/http://pm.tamil.net/pub/pm0145/tanti.pdf |url-status=dead }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[திருக்குறள்]]- [[உவமையணி]] :&lt;br /&gt;
&lt;br /&gt;
[[எடுத்துக்காட்டு]] :&lt;br /&gt;
&lt;br /&gt;
{{cquote|வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்&lt;br /&gt;
கோலொடு நின்றான் இரவு}}&lt;br /&gt;
&lt;br /&gt;
‌விள‌க்க‌ம் :&lt;br /&gt;
&lt;br /&gt;
செ‌‌ங்கோ‌ல் உடைய அரச‌ன் ஒருவ‌ன் த‌ன் அ‌திகார‌த்‌தினைப் பய‌‌ன்படு‌த்‌தி வ‌ரி ‌எ‌ன்ற பெய‌ரி‌ல் ம‌க்க‌ளிட‌ம் பண‌ம் வசூ‌லி‌ப்பது, வே‌ல் முத‌லிய ஆயுத‌ங்களைக் கொ‌ண்ட ஒரு வ‌ழி‌ப்ப‌றி செ‌ய்வத‌ற்குச் சம‌ம் ஆகு‌ம்.&lt;br /&gt;
  &lt;br /&gt;
[[உவமான‌ம்]]  -   வேலொடு நின்றான் இடுஎன்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[உவமேய‌ம்]] -   கோலொடு நின்றான் இரவு.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[உவம உருபு]]     -   போலும்&lt;br /&gt;
&lt;br /&gt;
== உவமையணியின் வகைகள் ==&lt;br /&gt;
உவமையணி 24 வகைப்படும்.  அவையாவன: &lt;br /&gt;
*1. விரி உவமையணி&lt;br /&gt;
*2. தொகை உவமையணி&lt;br /&gt;
*3. [[இதரவிதர உவமையணி]] &lt;br /&gt;
*4. [[சமுச்சய உவமையணி]]&lt;br /&gt;
*5. உண்மை உவமையணி&lt;br /&gt;
*6. மறுபொருள் உவமையணி&lt;br /&gt;
*7. புகழ் உவமையணி&lt;br /&gt;
*8. நிந்தை உவமையணி&lt;br /&gt;
*9. [[நியம உவமையணி]]&lt;br /&gt;
*10.[[அநியம உவமையணி]]&lt;br /&gt;
*11.[[ஐய உவமையணி]]&lt;br /&gt;
*12.[[தெரிதருதேற்ற உவமையணி]]&lt;br /&gt;
*13.இன்சொல் உவமையணி&lt;br /&gt;
*14.[[விபரீத உவமையணி]]&lt;br /&gt;
*15.இயம்புதல் வேட்கை உவமையணி&lt;br /&gt;
*16.பலபொருள் உவமையணி&lt;br /&gt;
*17.[[விகார உவமையணி]]&lt;br /&gt;
*18.மோக உவமையணி&lt;br /&gt;
*19.[[அபூத உவமையணி]]&lt;br /&gt;
*20.பலவயிற்போலி உவமையணி&lt;br /&gt;
*21.[[ஒருவயிற்போலி உவமையணி]]&lt;br /&gt;
*22.கூடா உவமையணி&lt;br /&gt;
*23.[[பொதுநீங்குவமையணி]]&lt;br /&gt;
*24.[[மாலையுவமையணி]]&lt;br /&gt;
&lt;br /&gt;
என்பனவாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவையன்றி&lt;br /&gt;
# பண்பு உவமையணி&lt;br /&gt;
# தொழில் உவமையணி&lt;br /&gt;
# பயன் உவமையணி.&lt;br /&gt;
# [[சந்தான உவமையணி]]&lt;br /&gt;
# ஒப்புவமையணி&lt;br /&gt;
# விலக்குவமையணி &lt;br /&gt;
எனப் பலவகையுண்டு&lt;br /&gt;
=== பண்பு உவமையணி ===&lt;br /&gt;
ஒரு பொருளின் [[வண்ணம்]], [[வடிவம்]], [[அளவு]], [[சுவை]],ஆகியவை அப்பொருளின் &#039;[[பண்பு]]&#039; எனப்படும். இப்பண்புகள் காரணமாக அமையும் உவமையணி, [[பண்புஉவமையணி]] ஆகும்&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சான்றுகள்]]:&lt;br /&gt;
&#039;&#039;{{cquote|பால்போலும் இன்சொல்; பவளம்போல் செந்துவர்வாய்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கண்ட சொற்றொடர்கள், பால் போன்ற இனிய சொல், பவளத்தைப் போன்றசிவந்த வாய் என்ற பொருட்களைத் தருவதால் பாலின் [[சுவைப் பண்பு]] இனிய சொல்லிற்கும் பவளத்தின் [[வண்ணப் பண்பு]] சிவந்த வாயிற்கும் உவமையாகக் கூறப்பட்டிருப்பதை அறியலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொழில் உவமையணி ===&lt;br /&gt;
ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாக அமையும் உவமையணி, [[தொழில் உவமையணி]] எனப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சான்றுகள்: &lt;br /&gt;
&amp;quot;புலிமறவன்&amp;quot;,&amp;quot;குரங்குமனம்&amp;quot;&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்காணும் சான்றுகள்,&lt;br /&gt;
புலியைப் போன்று பகைவருக்குத் துன்பம் தரும் வலிமையினை உடைய மறவன், குரங்கு போன்று அங்கும் இங்கும் தாவுகின்ற மனம் என்ற பொருட்களைத் தருகின்றன. துன்பம் தருதல், தாவுதல் போன்ற தொழில் ஒப்புமை காரணமாக இவை தொழில் உவமையணி ஆயிற்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== பயன் உவமையணி ===&lt;br /&gt;
ஒரு பொருளால் கிடைக்கும் பயன் காரணமாக அமையும் உவமையணி [[பயன் உவமையணி]] எனப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சான்று]]: &lt;br /&gt;
&amp;quot;கார் நிகர் வண்கை&amp;quot;&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
([[கார்]]-மழை;[[வண்கை]]-கொடைத்தன்மை)&lt;br /&gt;
&lt;br /&gt;
மழையை ஒத்த கொடைத் தன்மையை உடைய கை என்பது இவ்வடியின் பொருள். மழையால் விளையும் பயனும் வள்ளலின் கை வழங்கும் கொடையால் விளையும் பயனும் ஒத்தலின் இது பயன் உவமையணி ஆயிற்று.&lt;br /&gt;
 &lt;br /&gt;
உவமையணியில் [[உவமானம்]] ,[[உவமேயம்]], [[உவமை உருபுகள்]] ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும். இவைகளோடு பொதுத்தன்மையும் இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== உவமானம் ==&lt;br /&gt;
புலவர் அல்லது கவிஞர் ஒப்பிடக் கொண்டு வந்த பொருள். அதாவது சிறப்பிக்கப்படும் பொருளைச் (உவமேயம்) விளக்குவதற்கோ அழகுபடுத்துவதற்கோ வந்த சிறப்புப் பொருள் [[உவமானம்]] அல்லது  [[உவமை]] எனப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== உவமேயம் ==&lt;br /&gt;
புலவர் அல்லது கவிஞர் விளக்கிக் கூறக் கருதும் பொருள், அதாவது சிறப்பிக்கப்படும் பொருள் உவமேயம் எனப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== உவம உருபுகள் ==&lt;br /&gt;
இரு பொருள்களை ஒப்புமைப் படுத்துவதற்காகப் பயன்படுத்தும் இடைச்சொல்லான &#039;போன்ற&#039; என்பது போலப் பொருள் தரும் சொற்கள் உவம உருபுகள் எனப்படும்.&lt;br /&gt;
உதாரணம்: &#039;&#039;போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய, அற்றே&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
(எ.கா.)&lt;br /&gt;
உவம உருபு     -  தொடர்&lt;br /&gt;
# போல      -   கிளி போலப் பேசினாள்.&lt;br /&gt;
# புரைய     -  வேய்புரை தோள்.&lt;br /&gt;
# ஒப்ப      -  தாயொப்ப பேசும் மகள்.  &lt;br /&gt;
# உறழ      -  முறவு உறழ் தடக்கை.&lt;br /&gt;
# அன்ன     -  மலரன்ன சேவடி.&lt;br /&gt;
&lt;br /&gt;
உவம உருபுகளை,&lt;br /&gt;
:{{cquote|போலப் புரைய ஒப்ப உறழ&lt;br /&gt;
:மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப&lt;br /&gt;
:நேர நிகர அன்ன இன்ன&lt;br /&gt;
:என்பவும் பிறவும் உவமத் துருபே.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
::: - [[நன்னூல்]].நூற்பா. 367.&lt;br /&gt;
என்ற மேற்கண்ட நூற்பா பட்டியலிடுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பொதுத்தன்மை ==&lt;br /&gt;
இரண்டுக்கும் உள்ள தன்மை(சந்திரன் போல முகம். இங்கு சந்திரன் உவமானம். முகம் உவமேயம். இதில் சந்திரனின் வடிவம், அழகு, வட்டம், குளிர்மை போன்றவை பொதுத்தன்மை)&lt;br /&gt;
&lt;br /&gt;
சான்று: &#039;&#039;அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை&#039;&#039;&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு,&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
உவமானம்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
உவமை உருபு: போல&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== உவமைத்தொகை ==&lt;br /&gt;
{{Main|உவமைத் தொகை}}&lt;br /&gt;
வெளிப்படையாகத் தெரியாத உவமைஉருபுகள் உவமைத்தொகை எனப்படும். அதாவது உவமை தொக்கி நிற்பது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;blockquote&amp;gt;&lt;br /&gt;
உதாரணம்:&lt;br /&gt;
&#039;&#039;கயல்விழி - கயல் போல் விழி&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
இங்கு உவமை உருபு (போல்) மறைந்து நிற்கிறது.&#039;&#039;&amp;lt;br /&amp;gt;&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இதே போல இன்னொரு உதாரணம்:&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;மதிமுகம்  - மதி போன்ற முகம்&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
உவமை உருபு (போன்ற) மறைந்து நிற்கிறது.&#039;&#039;&lt;br /&gt;
&amp;lt;/blockquote&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
உவமையணியை இன்னொரு விதத்தில் இன்னும் இரண்டாகப் பிரிக்கலாம்.&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
அவையாவன: &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
1- எடுத்துக்காட்டு உவமையணி&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
2- இல்பொருள் உவமையணி&lt;br /&gt;
&lt;br /&gt;
== தேன் போன்ற தமிழ் ==&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Main|எடுத்துக்காட்டு உவமையணி}}&lt;br /&gt;
இது நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது&amp;lt;br /&amp;gt;இதில் உவைமை உருபுகள் வெளிப்ப்ட வருவதில்லை.உவமை,உவமேயம் தனித்தனித் தொடர்களக வருகின்றன.&lt;br /&gt;
உதாரணம்:&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&#039;&#039;தொட்டனைத்து ஊறும் மணற்கேணி&#039;&#039;&#039;&#039;&#039;&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;&#039;&#039;&#039;மாந்தர்க்கு கற்றெனத் தூறும் அறிவு&#039;&#039;&#039;&#039;&#039;&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
&#039;&#039;மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் கிண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும்.&#039;&#039;&lt;br /&gt;
&#039;&#039;அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்.&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
== இல்பொருள் உவமையணி ==&lt;br /&gt;
{{Main|இல்பொருள் உவமையணி}}&lt;br /&gt;
இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது. &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
உதாரணம்:&lt;br /&gt;
{{cquote|அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்&#039;&#039;&#039;&#039;&#039;.       &lt;br /&gt;
&#039;&#039;&#039;&#039;&#039;வற்றல் மரம் தளிர்த்தற்று - குறள் 79}}.&lt;br /&gt;
விளக்கம் :&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
அதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது. அதாவது வலிமையான பாலைவனத்திலே பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அதே போலத்தான் அன்பில்லா வாழ்க்கையும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நாட்டார் பாடலில் உவமை== &lt;br /&gt;
நாட்டார் பாடல்களிலும் உவமைகள் பொருத்தமுற, அழகாக, இயல்பாகக் கையாளப்பட்டுள்ளன. இவை ஏட்டுக் கவிதைகளில் புலவர்களால் பொதுவாகக் கையாளப்படும் உவமைகளிலும் பார்க்கச் சுவையுடைத்தாய் உள்ளன. ஓரிரு உதாரணங்கள் வருமாறு&lt;br /&gt;
&lt;br /&gt;
* மாவிலங்கம் பட்டைபோல மானிறைச்சிச் துண்டுபோல&lt;br /&gt;
ஈச்சம் குருத்துப்போல இருந்துமுகம் வாடலாமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
(மாவிலங்க மரத்தின் பட்டையையும் மானிறைச்சியையும் ஈச்சம் குருத்தையும் நாட்டு மக்கள் வெயிலிலே காயவைத்து வெவ்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது வழக்கம். இந்த இயற்கையான நிகழ்ச்சியையே நாட்டுப்புறக் கவிஞன் உவமையாகக் காட்டுகின்றான்)&lt;br /&gt;
&lt;br /&gt;
* தேசிப் பழத்தழகி தேங்காய் முலையழகி&lt;br /&gt;
பாசிப் பழத்தழகி பக்கத்தில் நான் வந்திடுவேன்.&lt;br /&gt;
{{அணி இலக்கணம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரம்==&lt;br /&gt;
{{reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:அணி இலக்கணம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2409:40F4:1011:6459:8000:0:0:0</name></author>
	</entry>
</feed>