<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A1CD0%3A6930%3AD18D%3A6794%3AC7F1%3AEBD2</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A1CD0%3A6930%3AD18D%3A6794%3AC7F1%3AEBD2"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2401:4900:1CD0:6930:D18D:6794:C7F1:EBD2"/>
	<updated>2026-06-02T14:44:54Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=400060</id>
		<title>திரையன்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=400060"/>
		<updated>2024-11-24T19:17:04Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:6930:D18D:6794:C7F1:EBD2: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;தொண்டைநாட்டு மன்னன் &#039;&#039;&#039;திரையன்&#039;&#039;&#039;. &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
“தொண்டை நாடு சான்றோர் உடைத்து” என்பர். சான்றோர் தொண்டுள்ளம் படைத்தவர். தொண்டுள்ளம் படைத்தவர் வாழும் நாடு தொண்டைநாடு. தொண்டைநாட்டு அரசன் திரையன். நாகநாட்டிலிருந்து கடல்-திரையில் மிதந்து வந்த பிள்ளை ஆதலால் திரையன் எனப்பட்டான் என அறிஞர்கள் உய்த்துணர்கின்றனர். [[தமிழகம்|தமிழகத்தில்]] [[வேங்கடம்|வேங்கட மலையில்]] ([[திருமலை]]) ஆண்ட சங்ககால தமிழ் மன்னன் திரையன் ஆவார். &lt;br /&gt;
&lt;br /&gt;
தொண்டைமான் இளந்திரையனைக் [[கடியலூர் உருத்திரங்கண்ணனார்]] பாடிய பாட்டு பெரும்பாணாற்றுப்படை. இந்தப் பாடலில் இவன் பல்வேல் திரையன் எனப் போற்றப்படுகிறான்.&amp;lt;ref&amp;gt;மலர்தலை உலகத்து மன்னுயிர் காக்கும் முரசு முழங்கு தானை மூவருள்ளும் இலங்குநீர்ப் பரப்பின் வளை மீக்கூறும் வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் அல்லது கடிந்த அறம் புரி செங்கோல் பல்வேல் திரையன் - பெரும்பாணாற்றுப்படை 37&amp;lt;/ref&amp;gt; &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
இந்தப் பாட்டுக்குப் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பபட்ட வெண்பாவில் “கான் பயந்த கண்ணிக் கடுமான் திரையன்” எனப் போற்றப்பட்டுள்ளான். &lt;br /&gt;
;வேங்கட நாட்டு அரசன்&lt;br /&gt;
: இந்தத் திரையன் திருவேங்கடமலைப் பகுதி நாட்டுக்கு அரசன்.&amp;lt;ref&amp;gt;வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை - காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் பாடல் அகம் 85-9&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
; பவத்திரி தலைநகர்&lt;br /&gt;
: பொலம்பூண் திரையன் எனப் போற்றப்பட்ட இந்தத் திரையன் பவத்திரி என்னும் ஊரில் இருந்துகொண்டு செங்கோலோச்சி வந்தான்.&amp;lt;ref&amp;gt;செல்லா நல்லிசை பொலம்பூண் திரையன் பவத்திரி அன்ன நலம் - நக்கீரர் பாடல் அகம் 340-6&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==அடிக்குறிப்பு==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தொண்டையர்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:6930:D18D:6794:C7F1:EBD2</name></author>
	</entry>
</feed>