<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A1C0F%3A342F%3A7C66%3A62%3AAB8C%3A61D1</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A1C0F%3A342F%3A7C66%3A62%3AAB8C%3A61D1"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2401:4900:1C0F:342F:7C66:62:AB8C:61D1"/>
	<updated>2026-06-02T17:41:16Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=283598</id>
		<title>இலக்கியம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=283598"/>
		<updated>2022-11-13T22:05:01Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1C0F:342F:7C66:62:AB8C:61D1: /* தமிழ் இலக்கியம் */&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039;இலக்கியம்&#039;&#039;&#039; ({{audio|Ta-இலக்கியம்.ogg|ஒலிப்பு}}) என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும்.&amp;lt;ref&amp;gt;வ. விஜயபாஸ்கரன் (தொகுத்தது). (2001). &#039;&#039;சரஸ்வதி களஞ்சியம்&#039;&#039;. சென்னை: கலைஞன் பதிப்பகம். பக்கம் 98.&amp;lt;/ref&amp;gt; இந்த வரையறையின் கீழ் இலக்கியத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்:&lt;br /&gt;
# இன்பியல் இலக்கியம்&lt;br /&gt;
# அறிவியல் இலக்கியம்&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;இன்பியல்&#039; இலக்கியம் &amp;quot;கற்போர் உள்ளத்துக்கு இன்பம் தரும் நூல்கள்&amp;quot;.&amp;lt;ref&amp;gt;வ. விஜயபாஸ்கரன் (தொகுத்தது). (2001). &#039;&#039;சரஸ்வதி களஞ்சியம்&#039;&#039;. சென்னை: கலைஞன் பதிப்பகம்.&amp;lt;/ref&amp;gt; அறிவியல் இலக்கியம் கற்போருக்கு அறிவை முதன்மையாகத் தரும் இலக்கியம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தமிழ் இலக்கியம் ==&lt;br /&gt;
&#039;&#039;முதன்மைக் கட்டுரை: [[தமிழ் இலக்கியம்]]&#039;&#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ் குறைந்தது 2000 வருடங்கள் இலக்கிய வளமும் தொடர்ச்சியும் கொண்ட ஒரு மொழியாகும். எனினும், தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவை, இன்பியல் இலக்கியங்களே. இது, &amp;quot;இலக்கிய வளர்ச்சி, அரசர்களையும் குறுநில மன்னர்களையும் சுற்றி வந்ததால்&amp;quot; ஏற்பட்டிருக்கலாம்.&amp;lt;ref&amp;gt;வ. விஜயபாஸ்கரன் (தொகுத்தது). (2001). &#039;&#039;சரஸ்வதி களஞ்சியம்&#039;&#039;. சென்னை: கலைஞன் பதிப்பகம். பக்கம் 99.&amp;lt;/ref&amp;gt; அதன் விளைவாக இலக்கியம் என்ற சொல் தமிழில் இன்பியல் இலக்கியத்தையே பெரும்பாலும் குறித்து நிற்கின்றது. சிறுகதை, நாவல், கவிதை, நாடகம் ஆகிய எழுத்துக் கலை வடிவங்களே இன்று தமிழ் இலக்கியம் என பொதுவாகக் கருதப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ் இலக்கிய வரலாற்றில், அறிவியல் இலக்கிய படைப்புகள் மிக அரிது. வரலாற்று ரீதியில், தற்கால ரீதியில், ஆங்கிலத்திடனும் ஒப்பிடுகையில் இந்தக் குறை தெளிவாகத் தெரியும். இன்று, அறிவியல் தமிழ் இலக்கியத்தின் தேவை கருதி [[அறிவியல் தமிழ்|அறிவியல் தமிழை]] வளர்க்க [[தமிழ்நாடு]] அரசும் தமிழ் ஆர்வலர்களும் பெரிதும் முயன்றுவருகின்றனர். இலக்கியம், இலக்கியத்துக்காக என்பதை விட, இலக்கியம், மக்களின் பயன்பாட்டுக்காக என்பதே அறிவியல் தமிழின் ஒரு முக்கிய விழுமியம் எனலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===வரலாறு===&lt;br /&gt;
&lt;br /&gt;
முதன்முதலாக இலக்கியம் எனும் வடிவத்தில் தோலாமொழித் தேவர்(கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி)இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளதைப் பின்வரும் சூளாமணி:459 ஆம் பாடல் வாயிலாக அறியமுடிகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;காமநூலினுக்கு இலக்கியம் காட்டிய வளத்தால்&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
அகத்தியர் பெயரால் வழங்கப்பட்டு வரும் ஒரு பழம்பாடலான பேரகத்தியத் திரட்டு,மேற்.1 இல்,&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே&lt;br /&gt;
எள்இன்று ஆகில் எண்ணெயும் இன்றே&lt;br /&gt;
எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல்&lt;br /&gt;
இலக்கியத்தினின்று எடுபடும் இலக்கணம்.&amp;quot;என்பதில் தான் இலக்கியம் எனும் சொல்லாட்சி எடுத்துக்காட்டு அல்லது உதாரணம் ஆகிய பொருளில் குறிப்பிடப் பெறாமல்,கற்பனை வளமும் கலையழகும் வாய்ந்ததொரு படைப்பு எனச் சுட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இப்பாடல் யாப்பருங்கல விருத்தியாசிரியரால் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான், மேற்கு நாட்டுக் கல்வியைப் பயின்று சிறந்த, மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களும், பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை அவர்களும் ஆங்கிலத்தில் வழங்கிவரும் &#039;லிட்டிரேச்சர்&#039;&lt;br /&gt;
(Literature) என்னும் சொல்லிற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல்லாக இதனை வழக்கிற்குக் கொண்டு வந்துள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;ref name=&amp;quot;இலக்கியக்கலை&amp;quot;&amp;gt;{{cite book | title=இலக்கியக்கலை | publisher=பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் | year=1999 | location=திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை-600018 | pages=3}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
===பாவாணரின் கருத்து===&lt;br /&gt;
&lt;br /&gt;
மொழியை வாயிலாகக் கொண்டு படைக்கப்பெறும் கலை, பல்வகை வடிவங்களை உடையது;அது பாட்டு வடிவமாகவும், உரைநடை வடிவமாகவும் இருக்கலாம்; ஒரு குறிப்பிட்ட பாவகையால் மட்டும் இயன்றதாக இருக்கலாம்; அல்லது பல்வேறு பாவகைகளால் அமைந்ததாகவும் இருக்கலாம். இவ்வாறு மொழியை வாயிலாகக் கொண்டு பல்வகை வடிவங்களில் வழங்கிவரும் கலைக்குப் பொதுவான பெயர் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. சோபரான்,ஜெனார்க்கஸ், ஆகியோரின் உரைநடைக் கோவைக்கும் சாக்ரடீஸின் உரையாடல்களுக்கும் பொருந்துமாறு அமையும் பொதுப்பெயர் எதுவும் தோன்றவில்லை.&amp;lt;ref&amp;gt;{{cite book | title=அரிஸ்டாடிலின் கவிதை இயல் | publisher=நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்.,சென்னை-14 | author=அ.அ.மணவாளன் | year=2001 | pages=19}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நிலையில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள் இலக்கியம் என்னும் சொல்லிற்குப் பின்வரும் வகையில் தரும் விளக்கம் புதுமையும், முன்மைத் திறனும் (Originality)&lt;br /&gt;
உடையதாகக் காணப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;இலக்கு-இலக்கியம், இலக்கு-இலக்கணம். இலக்கு-குறி;குறிக்கோள். சிறந்த வாழ்க்கைக் குறிக்கோளான,அறத்தை எடுத்துக் காட்டுவது,இலக்கியம்.சிறந்த மொழிக் குறிக்கோளான, அமைப்பை எடுத்துக் கூறுவது, இலக்கணம். இலக்கணத்திற்கு அணங்கம் என்றும் இலக்கியத்திற்கு அணங்கியம் என்றும் பெயருண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
இலக்கு-லஷ்(வ) இலக்கியம்-லஷ்ய(வ) இலக்கணம்-இலஷணம்(வ) இலக்கணம், இலக்கியம் என்னும் சொற்கள் போல் லஷண , லஷய என்னும் வடசொற்கள் மொழியமைதியையும்(Grammar),&lt;br /&gt;
நூற்றொகுதியையும்(Literature)&lt;br /&gt;
குறிப்பதில்லை என்பது பாவாணரின் துணிவாகும்.இத்தகைய எண்ணப் போக்கே பரவலாகத் தமிழ் அறிஞர்கள் இடையே நிலவி வருகிறது.&amp;lt;ref&amp;gt;{{cite book | title=இலக்கியக்கலை | publisher=திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18 | author=பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் | year=1999 | pages=5}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
Literature என்னும் ஆங்கிலச் சொல், இலக்கியம் எனும் பொருளில் கி.பி. ஆயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டில்(1812)தான் வழக்கிற்கு வந்ததென்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி எடுத்துரைக்கின்றது.&amp;lt;ref&amp;gt;{{cite book | title=இலக்கியக்கலை | publisher=திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18 | author=பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் | year=1999 | pages=11}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
===வரையறை===&lt;br /&gt;
&lt;br /&gt;
இலக்கியம் பற்றி பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் என்பார், இலக்கியம், மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டது; மனிதனின் சிந்தனைக்கும், உணர்வுக்கும், கற்பனைக்கும் விருந்தாக அமைவது; மனிதனின் மொழியோடு தொடர்புடையது; சொற்கோலமாக விளங்குவது; குறிப்பிட்ட ஒரு வடிவினை, செய்யுளாலோ, உரைநடையாலோ உடையது; கற்பவருடைய எண்ணத்தில் எழுச்சியையும், இதயத்தில் மலர்ச்சியையும் உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்தது; இன்புறுத்துவதோடு அறிவுறுத்தும் ஆற்றலை உடையது என்று எடுத்துரைப்பார்.&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;{{cite book | title=இலக்கியக்கலை | publisher=திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்-சென்னை-18 | author=அ.ச.ஞானசம்பந்தன் | year=1999}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==இலக்கியத் தோற்றம்==&lt;br /&gt;
&lt;br /&gt;
தெய்வீக அகத்தூண்டுதலால் இலக்கியம் உருவாக்கப்படுவதாக எடுத்துரைப்படுகின்றது.தெய்வீக அகத் தூண்டுதல் பொதுவாகக் கலைப் படைப்பிற்கும் சிறப்பாக இலக்கியப் படைப்பிற்கும் உந்துதல் சக்தியாக அமைகிறது என்பது பிளேட்டோவின் கருத்தாகும்.&amp;lt;ref&amp;gt;{{cite book | title=இலக்கியக்கலை | publisher=திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18 | author=பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் | year=1999 | pages=21}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
உள்ளப் பகுப்பாய்வின்(Psycho analysis)கோட்பாட்டை உருவாக்கிய ஃபிராய்ட் எனும் உளவியல் அறிஞர்,&amp;quot;அகத் தூண்டுதல் மனிதனுடைய அடிமனத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மனித உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் ஒரு கருவியாக அமைகிறது&amp;quot;என்கிறார்.&amp;lt;ref&amp;gt;{{cite book | title=இலக்கியக்கலை | publisher=திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18 | author=பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் | year=1999 | pages=23}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==இலக்கியத்தின் இயல்புகள்==&lt;br /&gt;
&lt;br /&gt;
அறிஞர் ந.சஞ்சீவி, இலக்கியத்தின் சிறப்பு இயல்புகளாகக் கூறுவது,&lt;br /&gt;
&lt;br /&gt;
1.புதுமை&lt;br /&gt;
&lt;br /&gt;
2.பெருமை&lt;br /&gt;
&lt;br /&gt;
3.பொதுமை&lt;br /&gt;
&lt;br /&gt;
4.பொருண்மை &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகியனவாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவற்றுள் புதுமை இருவகைப்படும். அவையாவன:&lt;br /&gt;
&lt;br /&gt;
1.பாடுபொருளாகிய பொருண்மையில் புதுமை.&lt;br /&gt;
&lt;br /&gt;
2.புத்தாக்கங்கள் இடம்பெறும் மற்றும் உணர்த்தும் முறையில் புதுமை.&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருண்மையில் உயர்ந்ததாகவும், பொதுநலப் பண்பில் சிறந்ததாகவும், புதுமைக் கவர்ச்சி வாய்ந்ததாகவும், விளங்கும் இலக்கியமே பெருமையுடையதாக கருதப்படும்.இலக்கியத்தின் இந்நால்வகைப் பண்புகளும் ஒன்றோடொன்று இணைந்தும் பிணைந்தும் இயங்குகின்றன.&amp;lt;ref&amp;gt;{{cite book | title=இலக்கியக்கலை | publisher=திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18 | author=பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் | year=1999 | pages=29-30}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுதவிர,அக இயல்புகளாக,&lt;br /&gt;
&lt;br /&gt;
1) கலையழகு&lt;br /&gt;
&lt;br /&gt;
2) குறிப்பாற்றல்&lt;br /&gt;
&lt;br /&gt;
3) நிலைபேறுடைமை&lt;br /&gt;
&lt;br /&gt;
4) ஆசிரியரின் ஆளுமை&lt;br /&gt;
&lt;br /&gt;
5) இன்புறுத்தல்&lt;br /&gt;
&lt;br /&gt;
6) கற்பனை&lt;br /&gt;
&lt;br /&gt;
7) குறிக்கோள் &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகிய ஏழினையும்,&lt;br /&gt;
&lt;br /&gt;
புற இயல்புகளாக,பின்வரும் வடிவப் பண்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.  அவையாவன:&lt;br /&gt;
&lt;br /&gt;
1) சீர்&lt;br /&gt;
&lt;br /&gt;
2) தளை&lt;br /&gt;
&lt;br /&gt;
3) தொடை&lt;br /&gt;
&lt;br /&gt;
4) எதுகை&lt;br /&gt;
&lt;br /&gt;
5) மோனை&lt;br /&gt;
&lt;br /&gt;
6) ஒலிநயம்&lt;br /&gt;
&lt;br /&gt;
7) உவமை&lt;br /&gt;
&lt;br /&gt;
8) உருவகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
9) படிமம்&lt;br /&gt;
&lt;br /&gt;
10)குறியீடு &lt;br /&gt;
&lt;br /&gt;
முதலான அணிநயங்களாகும் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;{{cite book | title=இலக்கியக்கலை | publisher=திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18 | author=பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் | year=1999 | pages=29-45}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==இலக்கிய வகைகள்==&lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவாக, இலக்கியம், வடிவ அமைதி, பொருள், வெளிப்பாட்டு முறை ஆகியவற்றைக் கொண்டு பல வகையாகப் பாகுபடுத்தப்படும். இலக்கியம் உணர்வை சார்ந்து அமைவது ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===அயல்நிலைப் பாகுபாடு===&lt;br /&gt;
&lt;br /&gt;
இலக்கியத்தைத் தூய இலக்கியம், சார்பு இலக்கியம் என வகைப்படுத்துவர். இவற்றுள் தூய இலக்கியம் எனப்படுவது, இலக்கியத்தின் இயல்புகள் யாவும் முழுமையாக இடம் பெற்றுள்ள படைப்பிலக்கியமாகும். கற்பனைக்கோ,&lt;br /&gt;
கலையழகிற்கோ இடம் தராமல் கருத்துகளை அறிவுறுத்தும் இலக்கியம் சார்பு இலக்கியமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===அனுபவ நிலைப் பாகுபாடு===&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓர் இலக்கிய படைப்பானது, படைப்பாளனின் அனுபவத் தன்மை, செறிவு வகை, மனித உறவு, முயற்சித்திறன் ஆகியவற்றிற்கேற்ப படைக்கப்படுகிறது. இந்த அனுபவ நிலையையும் பொருளின் இயல்பையும் கருத்தில் கொண்டு இலக்கியம், ஐந்து வகைப்பட்டனவாகப் பாகுபடுத்தப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
(1)தன் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் படைக்கப்படும் இலக்கியம். இவற்றுள் முதன்மை இடம் பெறுவது தன்னுணர்ச்சிப் பாடல்களாகும். அடுத்து இசைப்பாடல்களும் பக்திப் பாடல்களும் அனுபூதிப் பாடல்களும், இரங்கற்பாக்களும், தன் வரலாறுகளும், பயண நூல்களும், வாழ்க்கை விளக்கமும், கலை இலக்கிய திறனாய்வுகளும் அடங்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
(2)மனித இனத்திற்குப் பொதுவாக அமைந்த வாழ்க்கையைப் பற்றிய இலக்கியம். அறநூல்கள், காப்பியங்கள், வரலாற்று நூல்கள், அம்மானைப் பாடல்கள், கதைப்பாடல்கள், கதைகள், புதினங்கள், நாடகங்கள் முதலானவை உதாரணங்களாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
(3)பல்வகையாக விரிந்து கிடக்கும் சமுதாயத்தைச் சித்திரிக்கும் இலக்கியம்.இதனுள் வருணனை, விளக்கம், கிளத்தல் நிறைந்த இலக்கிய வகைகள் அடங்கும். கம்பனின் இராமகாதை போன்ற காப்பியங்களும்,மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, மலைபடுகடாம் போன்ற வருணனை செய்யுள்கள் எடுத்துக்காட்டுகளாவன.&lt;br /&gt;
&lt;br /&gt;
(4)இயற்கை பற்றி எழுந்த இலக்கியம். எடுத்துக்காட்டு:அழகின் சிரிப்பு,ஆற்றுப்படை நூல்கள், ஐந்திணைப் பாடல்கள்,குறவஞ்சி இலக்கியங்கள், காப்பியங்களில் இடம் பெறும் நாட்டு,நகர,ஆற்றுப் படலங்கள் முதலியன.&lt;br /&gt;
&lt;br /&gt;
(5)இலக்கியம் பற்றியும் கலைநயம் பற்றியும் எடுத்துரைக்கும் இலக்கியம். இவற்றுள் ஐந்து இலக்கண நூல்கள், தண்டியலங்காரம், உவமான சங்கிரகம் போன்ற அணியிலக்கண &lt;br /&gt;
நூல்கள், பஞ்சமரபு ,கூத்து நூல் போன்ற கலைவிளக்க நூல்கள் அடங்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===வடிவ அமைதிப் பாகுபாடு===&lt;br /&gt;
&lt;br /&gt;
துறை,தாழிசை,விருத்தம் உள்ளிட்ட செய்யுள்கள், யாப்பிலக்கியங்கள், உரைநடை இலக்கியங்கள்  இதன் பாற்படும்.&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;{{cite book | title=இலக்கியக்கலை | publisher=திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18 | author=பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் | year=1999 | pages=47-52}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==இலக்கியத்தின் உள்ளடக்கம்==&lt;br /&gt;
&lt;br /&gt;
புறவய யதார்த்தத்தின் கலைப்படைப்பே இலக்கியத்தின் உள்ளடக்கம்.&amp;lt;ref&amp;gt;{{cite book | title=இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும் | publisher=மக்கள் வெளியீடு,சென்னை-2 | author=பேராசிரியர் நா.வானமாமலை | year=1999 | pages=11}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
முதலாவதாக இது உண்மைக்கும் கலைப் படைப்பிற்கும் உள்ள உறவையும், அடுத்து கலை பிரதிபலிப்பினை அதன் தொடர்புகளோடு ஆராய்வதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==இலக்கியத்தில் உருவம்==&lt;br /&gt;
&lt;br /&gt;
உருவத்தின் இரு தன்மைகள் வருணனையும், உணர்ச்சி வெளியீடும் ஆகும்.&amp;lt;ref&amp;gt;{{cite book | title=இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும் | publisher=மக்கள் வெளியீடு,சென்னை-2 | author=பேராசிரியர் நா.வானமாமலை | year=1999 | pages=45}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இதன் கூறுகளாவன:&lt;br /&gt;
&lt;br /&gt;
1) கலை இயைபு&lt;br /&gt;
&lt;br /&gt;
2) கலைப் பின்னல்&lt;br /&gt;
&lt;br /&gt;
3) கலையின் உள்ளடக்கம்,உருவம் இவற்றின் ஒருமை.&lt;br /&gt;
&lt;br /&gt;
4) உள்ளடக்கத்தின் சாரம் உருவத்தில் பொதிந்திருத்தல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
5) அனுபவத்தின் பொதுமை, உருவத்தில் வெளிப்படுதல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
6) உருவ,உள்ளடக்க விகாரங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===கலை இயைபு===&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு கலைப்படைப்பில்,அதன் பகுதிகளுக்கும் அதன் முழுமைக்கும் இடையேயான இணைப்பே கலை இயைபு ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===கலைப்பின்னல்===&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு கருத்தைக் கலைப்படைப்பாக மாற்றுவதற்கு கலைப்பின்னல் ஊடகமாக இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இயைபும் கலைப்பின்னலும் உருவத்தின் இன்றியமையாதப் பகுதிகளாகும்.&amp;lt;ref&amp;gt;{{cite book | title=இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும் | publisher=மக்கள் வெளியீடு,சென்னை-2 | author=பேராசிரியர் நா.வானமாமலை | year=1999 | pages=46-51}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலும் காண்க ==&lt;br /&gt;
&lt;br /&gt;
*[[இலக்கணம்]]&lt;br /&gt;
*[[தமிழ் இலக்கணம்|தமிழிலக்கணம்]]&lt;br /&gt;
*[[ஆங்கில இலக்கியம்]]&lt;br /&gt;
*[[ஆங்கில இலக்கணம்]]&lt;br /&gt;
*[[பிரெஞ்சு இலக்கியம்]]&lt;br /&gt;
*[[பிரெஞ்சு இலக்கணம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள் ==&lt;br /&gt;
&amp;lt;references /&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1C0F:342F:7C66:62:AB8C:61D1</name></author>
	</entry>
</feed>