<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=120.56.173.103</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=120.56.173.103"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/120.56.173.103"/>
	<updated>2026-06-02T19:48:38Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=396259</id>
		<title>தியாகம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=396259"/>
		<updated>2025-01-18T17:11:04Z</updated>

		<summary type="html">&lt;p&gt;120.56.173.103: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;[[File:பெண்ணேஸ்வர மடம் நடுகல் 3.jpg|thumb| [[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி மாவட்டம்]], [[பெண்ணேஸ்வர மடம்]] என்ற ஊரில் தன் உடலை [[நவகண்டம்]] கொடுக்கும் ஒரு தியாகியின் நடுகல்]]&lt;br /&gt;
&#039;&#039;&#039;தியாகம்&#039;&#039;&#039; எனில் துறத்தல் அல்லது கைவிட்டுவிடுதல் என்று பொருள் படும். நாடு, இனம், சமூகம், மொழி மற்றும் கலாச்சாரம் போன்றவைகளின் உரிமைக்கான போராட்டத்தில் தன் உடல், பொருள், உயிர் ஆகியவைகளை ஒருவன் துறத்தலே தியாகம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==இந்து சமய நோக்கில் தியாகம்==&lt;br /&gt;
அனைத்து இல்லற இன்பங்களை துறந்தவனை [[துறவி]] என்பர். தியாகம் [[முக்குணங்கள்|முக்குணத் தன்மை]] உடையது. [[முக்குணங்கள்]] அடிப்படையில் தியாகத்தை மூன்றாக பிரித்து பகவான் ஸ்ரீகிருஷ்ணர், [[பகவத் கீதை|பகவத் கீதையில்]] பதினெட்டாவது அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===தாமசத் தியாகம்===&lt;br /&gt;
ஒருவனுக்கு விதிக்கப்பட்ட செயலை (கர்மத்தை) முற்றிலும் துறந்துவிடுவது முறையல்ல. அவ்வாறு [[தாமச குணம்|தாமச குணத்துடன்]], மதிமயக்கத்தினால் செயலை துறப்பது தாமசத் தியாகம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===இராட்சதத் தியாகம்===&lt;br /&gt;
ஒரு செயல் செய்வதால் துக்கத்தைத் தருமென்று நினைத்து, உடலை வருத்த வேண்டி இருக்குமோ என்ற பயத்தால் அந்த கருமத்தை செய்யாது விட்டால் அத்தியாகம், [[இராட்சத குணம்|இராட்சத குணத்துடன்]] தொடர்புடைய ராஜசத் தியாகம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===சத்துவத் தியாகம்=== &lt;br /&gt;
ஒருவனுக்கு விதிக்கப்பட்ட கர்மத்தை (செயலை)  தான் செய்தே ஆக வேண்டும்  என்ற முனைப்புடன், பற்றுதலையும் கர்மத்தால் உண்டாகும் பலனையும் துறந்து செயலைச் செய்தால் அவ்வகையான தியாகம் சாத்வீக தியாகம் ஆகும். [[சத்துவ குணம்]] நிறைந்தவனும், அறிவாளியும், ஐயம் நீங்கிய தியாகியானவன், ஒரு செயலை நல்லது அல்ல என்று வெறுப்பதும் இல்லை. ஒரு செயலை நல்லது என்று அதில் நாட்டம் கொள்வதும் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
உடலைத் தாங்குபவன் எவனும் செயல்களை துறந்து விடுவது என்பது முடியாத செயல்.  ஆகவே செயல்கள் செய்வதனால் உண்டாகும் புண்ணியம்-பாவம் எனும் கர்மபலன்களைத் தியாகம் (கைவிட்டுவிடுபவன்) செய்வனே &#039;&#039;&#039;தியாகி&#039;&#039;&#039;  எனப் போற்றப்படுவான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==தியாக பலன்கள்==&lt;br /&gt;
தாமச தியாகம் அல்லது இராட்ச தியாகம் செய்தவர்கள், தாம் இறந்த பின் இதமான, அல்லது இதமற்ற, அல்லது இரண்டும் கலந்த கர்ம பலனைகளை அனுபவிப்பார்கள். ஆனால் சத்துவ தியாகம் செய்தவர்கள் அதைவிட மேலான பலனை அடைவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==உதவி நூல்==&lt;br /&gt;
* [[பகவத் கீதை]], அத்தியாயம் 18, சுலோகம் 2 முதல் 13 வரை முடிய பக்கங்கள் &lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
{{Wikiquote|தியாகம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து மெய்யியல் கருத்துருக்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்திய மெய்யியல்]]&lt;br /&gt;
[[பகுப்பு:வைதிக மெய்யியல்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>120.56.173.103</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=412163</id>
		<title>நவகண்டம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=412163"/>
		<updated>2025-01-18T17:06:05Z</updated>

		<summary type="html">&lt;p&gt;120.56.173.103: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;[[File:பெண்ணேஸ்வர மடம் நடுகல் 3.jpg|thumb| [[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி மாவட்டம்]], [[பெண்ணேஸ்வர மடம்]] ஊரில் தன் கழுத்தை அறுத்து நவகண்டம் கொடுக்கும் ஒரு வீரனின் நடுகல்]]&lt;br /&gt;
&#039;&#039;&#039;நவகண்டம்&#039;&#039;&#039; என்பது, தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது நாளங்களையோ, ஒன்பது உடல் பாகங்களையோ அறுத்துத் தன்னையே பலி கொடுத்துக் கொள்வதாகும். தமிழகத்தில் 11ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் இந்தப் பலி கொடுத்துக் கொள்ளும் முறை இருந்துள்ளது. பொதுவாகக் கொற்றவை எனும் பெண் தெய்வத்திற்குத் தன்னைப் பலியிட்டுக் கொண்டுள்ளனர். இந்த நவகண்டப் பலியைப் பற்றி கோயில்களின் கல்வெட்டுகள், சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி போன்ற இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.&amp;lt;ref name=dinamalar&amp;gt;{{cite web|url=http://www.dinamalar.com/news_detail.asp?id=171622|title=தானே கழுத்தறுத்து பலி கொடுக்கும் &amp;quot;நவகண்டம்&#039; பழநியில் கண்டுபிடிப்பு|publisher=}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
சித்தர்கள் சிலர் &#039;நவகண்ட யோகம்&#039; எனும் சித்தினைக் கடைப் பிடித்துள்ளனர். &#039;நவகண்ட யோகம்&#039; என்பது தன்னுடைய உடல் பாகங்களை ஒன்பது துண்டுகளாக்கிக் கொண்டு சிவனை நினைத்து யோகம் செய்வதாகும்.&amp;lt;ref&amp;gt;[http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7792176.ece சித்தர்கள் அறிவோம் - சிவமாக ஒடுங்கிய யோகி﻿ ஸ்ரீ வீரராகவ சுவாமிகள்] தி இந்து, 22 அக்டோபர் 2015&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தச் சித்து முறையைச் செய்யும் போது அதனைக் கண்டவர்கள் பதறியுள்ளார்கள். அதன் பின்பு சித்தர்கள் முழு உருவோடு திரும்பி வந்த பிறகு அவரைச் சித்தர்களாக ஏற்று வழிபட்டார்கள் என்பதைப் பல்வேறு சித்தர்களின் வரலாறு தெரிவிக்கிறது.&amp;lt;ref&amp;gt;[http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article7455856.ece சித்தர்கள் அறிவோம்: உத்தமனைக் காணும் வழி- மகான் சாங்கு சித்த சிவலிங்க நாயனார்] தி இந்து, 23 யூலை 2015&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==நவகண்டம் - சொல்லிலக்கணம்==&lt;br /&gt;
உடலின் ஒன்பது பாகங்களைத் தானே அரிந்து கொற்றவைக்கு பலியிடுவது தான் நவகண்டம். &lt;br /&gt;
&lt;br /&gt;
==நவகண்டம் கொடுப்பதற்கான காரணங்கள்==&lt;br /&gt;
இந்த மாதிரி நவகண்டம் கொடுப்பதற்குப் பல காரணங்கள் உண்டு: &lt;br /&gt;
&lt;br /&gt;
# வலிமையான‌ எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற‌ தருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படுகிறது. [[துர்க்கை|துர்க்கைக்குப்]] பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக்கையில் நவகண்டம் கொடுக்கப்பட்டது.&lt;br /&gt;
# சில சமயங்களில் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அரசன் உடல் நலம் திரும்ப அவன்மீது பாசமிக்கவர்களால் நவகண்டம் கொடுக்கப்பட்டது.&lt;br /&gt;
# [[நோய்|நோயினால்]] சாவை எதிர் நோக்கிக் காத்திருக்கும் ஒருவன், நோயினால் சாக விரும்பாமல் வீர சொர்க்கம் அடைய விரும்பி  நவகண்டம் கொடுத்துக் கொள்வது.&lt;br /&gt;
# குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் [[மரணதண்டனை|மரண தண்டனைக்கு]] உள்ளாகும்போது, அவ்வாறு சாகாமல் அரசன் அனுமதியுடன் நவகண்டம் கொடுத்துக் கொண்டு வீர சொர்க்கம் அடைவ‌து.  &lt;br /&gt;
# ஒருவன் போர்க் காயத்தினாலோ, நோயினாலோ சாகும் தறுவாயில் இருக்கையில், அவன் செய்து முடிக்க வேண்டிய கடமைகள் இருக்குமாயின், தனது இறப்பைத் தள்ளிப் போடுமாறு [[கடவுள்|இறைவனிடம்]] வேண்டுவது. அப்படி நடக்கும் பட்சத்தில் அந்தக் கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக்  கொள்வது.&lt;br /&gt;
# ஒருவன் மிகப் பெரிய அவமானத்தைப் பெற நேர்ந்த காலை, அதன் பின் வாழ விரும்பாமல் சாகத் தீர்மானித்து, கோழை போல் சாக விரும்பாமல், வீரச்சாவை விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பொழுது முக்கியமானவர்களுக்குப் பூனைப்படை பாதுகாப்பு இருப்பதைப் போல, அக்காலத்தில் [[சோழர்|சோழர்களுக்கு]] &amp;quot;வேளக்கார படைகள்&amp;quot; எனும் அமைப்பும் [[பாண்டியர்|பாண்டியர்களுக்கு]] &amp;quot;தென்னவன் ஆபத்துதவிகள்&amp;quot; என்ற படைகளும் இருந்தன. இவர்கள், தங்கள் கவனக் குறைவினாலோ, தங்களை மீறியோ, அரசனின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விட்டால், துர்க்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் பிற்காலங்களில் [[கோயில்]] கட்டுவதற்கும், தடைப்பட்ட [[தேரோட்டம்|தேரோட்டத்தை]] தொடர்ந்து நடத்தவும், பிற காரணங்களுக்காகவும் மேற்சாதிக்காரர்களால் கீழ்ச் சாதிக்காரர்கள் நவகண்டம் கொடுக்க கட்டாயப்படுத்தப் பட்டார்கள்.{{ஆதாரம்}} இதில் கீழ்ச் சாதிப் [[பெண்|பெண்களும்]], [[குழந்தை|குழந்தைகளும்]] கூட ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.{{ஆதாரம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==தமிழகத்தில் நவகண்டம் கொடுக்கும் வழக்கம்==&lt;br /&gt;
வேண்டுதல் காரணமாக தன்னைத் தானே பலி கொடுக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது.&amp;lt;ref name=dinamalar/&amp;gt; இதைப் பற்றிக் கல்வெட்டுகளும், சிற்பங்களும் இங்கு, பரவலாகக் காணப்படுகின்றன. இம் மரபு [[தமிழகம்|தமிழகத்தில்]] தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. [[கொற்றவை]]யின் முன்பாகத் தன் வேண்டுதலை நிறைவேற்றத் தலையை அறுத்துப் பலியிட்டு கொண்டவர்களைப் பற்றிய குறிப்புகளும் [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களில்]] உள்ளன, குறிப்பாக [[கலிங்கத்துப்பரணி|கலிங்கத்துப்பரணியில்]] சோழ அரசின் வெற்றிக்காக இப்படி தலையை அறுத்துப் பலிகொடுத்த வீரனைப் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. இது போலவே தண்டனையாகவும் தன் தலையைத் தானே அறுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. பிடிபட்ட திருடனைக் குடும்பத்துடன் ஒரு நாள் மகிழ்வுடன் வாழவிட்டு, மறுநாள் கோவிலில் துர்க்கையின் முன் நவகண்டம் கொடுக்கச் செய்யும் வழக்கமும் உண்டு.{{சான்று தேவை}} மேலும் இது போன்றே தன் குடும்ப நன்மைக்காகவோ அல்லது முற்றிய நோயிலிருந்து மீள முடியாத பொழுதோ, நவகண்டம்  கொடுப்பது உண்டு. {{சான்று தேவை}} இது ஜப்பானில் [[சாமுராய்]] வீரர்கள் தோல்வியைத் தாங்க முடியாமல் தம் கழுத்தை அறுத்துக் கொள்ளும் [[ஹராகிரி]] என்ற சடங்கிற்கு ஒப்பானதாகும்.&amp;lt;ref&amp;gt;{{Cite web |url=http://sramakrishnan.com/view.asp?id=270&amp;amp;PS=1 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2016-08-23 |archive-date=2009-08-07 |archive-url=https://web.archive.org/web/20090807013916/http://www.sramakrishnan.com/view.asp?id=270&amp;amp;PS=1 |url-status=dead }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
===தமிழகத்தில் நவகண்டச் சிற்பங்களின் இருப்பிடம்===&lt;br /&gt;
தமிழகத்தில் காணப்படும் நவகண்டச் சிற்பங்கள் குறித்தான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயில்|திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயிலின்]] பிரகாரத்தில் கன்னிமார் சிலைகளுக்கு அருகே நவகண்டச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
* கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அதி ராஜ மாங்கல்ய புரம்( திருவதிகை) அருகில் கெடில நதி தென்கரையில் இருளக்குப்பம் சாத்திப்பட்டு அருகில் நங்கை அம்மன் கோவில் கொற்றவை அம்மனுக்கு முண்டன் மகன் என்பவன் நவகண்டம் கொடுத்துக் கொண்டதற்கு சான்றாக நவகண்ட சிலையும் அதைச் சுற்றி கல்வெட்டுக் குறிப்புகளும் உள்ளது இது பதினோராம் நூற்றாண்டில் வடிக்கப்பட்ட சிலையாகும் இதை பண்ருட்டி தமிழரசன் மற்றும் தமிழ் ஆர்வலர் ஆசிரியர் வேல்முருகன் ஆகியோர் கண்டுபிடித்து ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட்டனர்.&lt;br /&gt;
* [[திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயில்|திருமுக்கூடலூர் அனலாடீசுவரர் கோயில்]] முன்பு நவகண்டச் சிற்பம் அமைந்துள்ளது. ஆனால் அதன் தலை வெட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;
* [[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி மாவட்டம்]], [[பெண்ணேஸ்வர மடம் பெண்ணேஸ்வரர் கோயில்]] முன்பு பல நவகண்டச் சிற்பங்கள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
* [[மதுரை]]யிலிருந்து [[இராமேசுவரம்]] செல்லும் வழியில் மதுரையிலிருந்து 18கி.மீ. தூரத்தில், [[வைகை]] ஆற்றின் வடகரையில் மடப்புரம் காளிகோயில் உள்ளது. தென்கரையில் திருப்பூவணம் (திருப்புவனம்) உள்ளது. இந்த ஊரில் &amp;quot;புதூர்&amp;quot; என்ற பகுதியில், நவகண்டம் கொடுக்கும் இளைஞனின் சிற்பம் ஒன்று உள்ளது.&lt;br /&gt;
* பழநி பெரிய நாயகியம்மன் கோயில் அருகே உள்ள விநாயகர் கோயிலில் நவகண்டச் சிலை உள்ளது.&amp;lt;ref name=dinamalar/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பரவலர் ஊடகங்களில் நவகண்டத்தின் சான்றுகள் ==&lt;br /&gt;
* [[ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)|ஆயிரத்தில் ஒருவன் (2010)]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் [[சோழர்|சோழனின்]] [[தஞ்சாவூர்|தஞ்சை]] நோக்கிய பயணம் இனிதே நிறைவேற முதியவர் ஒருவர் நவகண்டம் தருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;
* [[காவல் கோட்டம்]] புதினத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட [[அரவான் (திரைப்படம்)|அரவான்]] என்ற தமிழ்த்திரைப்படத்தில் கதைமுடிவில் நாயகன் தன்னைத் தானே கொடுவாளால் வெட்டிக் கொண்டு நவகண்டம் தரும் காட்சி அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
[[பகுப்பு:பண்பாடு]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் வரலாறு]]&lt;br /&gt;
[[பகுப்பு:நடுகற்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>120.56.173.103</name></author>
	</entry>
</feed>