<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=103.247.48.234</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=103.247.48.234"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/103.247.48.234"/>
	<updated>2026-06-04T18:34:26Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=284498</id>
		<title>இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=284498"/>
		<updated>2024-09-13T04:36:24Z</updated>

		<summary type="html">&lt;p&gt;103.247.48.234: /* பாதுகாப்புக் காரணிகள் */&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;[[படிமம்:Karte von Ceylon.jpg|19ம் நூற்றாண்டில் இலங்கை|thumb|right]]&lt;br /&gt;
[[1796]] – [[1948]] வரை [[இலங்கை]]யை பிரித்தானியர் ஆட்சி செய்தனர். பிரித்தானிய முடியின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை நேரடியாக வருவதற்கு முன்பு &#039;&#039;&#039;[[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமே]]&#039;&#039;&#039;  இலங்கையை  தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தது. பிரித்தானியக் கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனம் கீழைத்தேய நாடுகளில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாக விளங்கிய இலங்கையைக் கைப்பற்றிக் கொள்ளப் பல்வேறு காரணிகள் ஏதுவாக அமைந்திருந்தன.&lt;br /&gt;
==ஏதுவான காரணிகள்== &lt;br /&gt;
===பாதுகாப்புக் காரணிகள்===&lt;br /&gt;
[[இந்தியா]] உட்பட கீழைத்தேய நாடுகளில் ஏற்கனவே தன் செல்வாக்கிற்கு உட்பட்ட பிரதேசங்களின் பாதுகாப்பிற்கும், இந்தியாவை முற்று முழுதாகத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் [[திருக்கோணமலை]]த் துறைமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது. புயல் அபாயங்களிலிருந்து தனது கடற்படையைப் பாதுகாத்துக் கொள்ளவும், இங்கு தனது கடற்படைத் தளத்தை அமைப்பதன் மூலம் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் பிரித்தானியா எண்ணியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
===ஆதரவுநிலை===&lt;br /&gt;
பிரித்தானிய ஏகாதிபத்தியக் கொள்கைகளையும், குடியேற்றவாதக் கொள்கைகளையும் விரிவுபடுத்த இலங்கையின் அமைவிடம் சாதகமாக அமைந்திருந்தமை&lt;br /&gt;
===பொருளாதாரக் காரணிகள்===&lt;br /&gt;
* பிரித்தானிய வர்த்தக்கத்தில் காணப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை (தலையிடாக் கொள்கை அல்லது தாராளவாதக் கொள்கை என அழைக்கப்படும்) காரணமாக இலங்கையில் மூலப் பொருட்களைப் பெற்று, முடிவுப் பொருட்களை சந்தைப்படுத்தக் களமமைக்க எண்ணிமை.&lt;br /&gt;
* [[இலங்கை]]யில் முதன்மை பெற்று விளங்கிய கறுவா வர்த்தகத்தைக் கைப்பற்றிக் கொள்ள எண்ணிமை.&lt;br /&gt;
* [[1789]]ம் ஆண்டின் பின்னர் [[பிரான்ஸ்]]சுடன் [[பிரித்தானியா]] மேற்கொண்ட போர்களின் போது பயன்படுத்தப்பட்ட போர்வீரர்களுக்கு போர் முடிவின் பின்னர் தொழில் வாய்ப்புக்களை வழங்கல். (பிரித்தானியரால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்ட துறைகளில் இந்தப் போர்வீரர்களின் பங்களிப்பே அதிகமாகக் காணப்பட்டிருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==கரையோரப் பிரதேசங்களை பிரித்தானிய வர்த்தக நிறுவனம் கைப்பற்றல்==&lt;br /&gt;
1796ல் பிரித்தானிய வர்த்தக நிறுவனம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றிய பின்னணி&lt;br /&gt;
* 18ம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்சியரும், ஆங்கிலேயரும் இந்தியாவில் தத்தம் ஆதிக்கத்தைச் நிலைநிறுத்தப் போராடினர். [[1789]]ல் பிரான்சியப் புரட்சியின் பின்னர் [[ஒல்லாந்து]] [[பிரான்ஸ்]]சின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.&lt;br /&gt;
* இந்த நிலையில் இலங்கையில் ஒல்லாந்தர் வசமிருந்த பகுதிகளைப் பிரான்ஸ்சின் கைக்குள் சிக்காதிருக்க ஒல்லாந்தப் பகுதிகள் மீது [[இங்கிலாந்து]] தாக்குதலை நடத்தியது.&lt;br /&gt;
* இதன் விளைவாக ஆகஸ்ட் 20. 1795 இல் கர்ணல் ஸ்டுவார்ட் தலைமையில் ஒரு படை திருகோணமலைத் துறைமுகத்தைக் கைப்பற்றிக் கொண்டது. &lt;br /&gt;
* தொடர்ந்து திருகோணமலைக் கோட்டையையும், [[செப்டம்பர் 18]], [[1795]] இல் [[மட்டக்களப்பு|மட்டக்களைப்பையும்]], [[அக்டோபர் 27]] ம் திகதி [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தையும்]], [[பருத்தித்துறை]]யையும், [[அக்டோபர் 5]]ம் திகதி கற்பிட்டியையும், [[பிப்ரவரி 3]], [[1796]] இல் [[நீர்கொழும்பு]], [[காலி]] ஆகிய இடங்களையும், 09ம் திகதி கொழும்பையும் கைப்பற்றிக் கொண்டது.&lt;br /&gt;
* இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்ற பிரித்தானியக் கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்திற்கு 06 மாதங்கள் எடுத்தன. (யூலை 02, [[1795]] முதல் [[பிப்ரவரி 14]], [[1796]]வரை)&lt;br /&gt;
&lt;br /&gt;
==1797 இலங்கைக் கலகம்==&lt;br /&gt;
[[இலங்கை]] வரலாற்றில் &#039;&#039;&#039;1797ம் ஆண்டு கலகம்&#039;&#039;&#039; ஒரு முக்கிய கலகமாக கொள்ளப்படுகின்றது. இக்கலகமானது பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்திற் கெதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு கலகமாகும். &lt;br /&gt;
* ஓல்லாந்தரும், ஆங்கிலேயரும் நண்பர்களாய் இருந்தமையால் பிரான்சிய ஆதிக்கத்திலிருந்து அது விடுபட்டால் இலங்கையைத் திருப்பிக் கொடுக்க வேண்டிவரும் எனக் கருதிய ஆங்கிலேயர் இதற்கிடையில் தமது யுத்தச் செலவையாவது ஈட்டிக் கொள்ளக் கருதினர். இதனால் அவசர, அவசரமாக வரிவிதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.&lt;br /&gt;
* ஓல்லாந்தர் காலத்தில் கடமையாற்றிய முதலியார்கள் நீக்கப்பட்டனர். பதிலாக சென்.ஜோர்ஜ் கோட்டையில் பணிபுரிந்த தென்னிந்திய உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் ‘அமில்தார்கள்’ என அழைக்கப்பட்டனர்.&lt;br /&gt;
* இவர்கள் பலபுதியவரிகளை மக்கள் மீது சுமத்தினர். இதனால் வர்த்தகக் நிறுவனத்திற் கெதிராக 1797ம் ஆண்டில் கலகம் ஏற்பட்டது.&lt;br /&gt;
===கலகத்திற்கான காரணிகள்===&lt;br /&gt;
* வர்த்தகக் கம்பனியினர் மக்கள் மீது சுமத்திய வரிச்சுமைகள்&lt;br /&gt;
* வரிகளை அறவிட இவர்கள் நடந்துகொண்ட கடுமையான வழிமுறைகள். (வரி அறவிடும் பகுதியை வரி வசூலிப்போருக்கு ஏலத்தில் விற்றனர்.)&lt;br /&gt;
* பதவி நீக்கப்பட்ட முதலியார்கள் எதிர்ப்பு&lt;br /&gt;
===கலகத்தின் போக்கு=== &lt;br /&gt;
* 1797ம் ஆண்டுக் கலகம் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் ஆட்சிக்கெதிராக சுதேச மக்களால் ஏற்படுத்தப்பட்ட கலகமாகும். முக்கியமாக கொழும்பு திசாவனி, இரயிகம, றேவாகம, சியான சல்பிற்று கோரளைகளில் ஆரம்பித்து யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், மட்டக்களப்பிலும் பரவியது. இக்கலகக்காரர்களுக்கு [[கண்டி]] இராச்சியத்தின் உதவி கிடைத்தது. மேலும் [[பிரான்ஸ்]] ஏஜண்டுகளினதும், ஒல்லாந்த உத்தியோகத்தர்களினதும் உதவியும் கிடைத்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
==இரட்டை ஆட்சிக்காலம்==&lt;br /&gt;
இலங்கையில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமும், பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்ட மகாதேசாதிபதியும் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகம் &#039;&#039;&#039;இரட்டை ஆட்சி&#039;&#039;&#039; எனப்படுகின்றது.&lt;br /&gt;
* பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்திற்கெதிரான 1797ம் ஆண்டுக்கலகமே இலங்கையில் இரட்டையாட்சியொன்று ஏற்பட அடிப்படையாக அமைந்தது.&lt;br /&gt;
* 1798ல் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் சிவில், இராணுவ நிர்வாகம், நீதிப்பரிபாலனம் போன்றவற்றைப் புரிய, ஒரு தேசாதிபதி பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்டார். &#039;&#039;(இலங்கையில் நியமிக்கப்பட்ட முதல் தேசாதிபதி ஸார் பிரடரிக் நோத் என்பராவார்)&#039;&#039;&lt;br /&gt;
* அதேநேரம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் வர்த்தகமும், இறைவரி நிர்வாகம் தொடர்ந்தும் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்தையே சார்ந்திருந்தது.&lt;br /&gt;
* இவ்வாறாக இலங்கையில் பிரித்தானிய அரசின் தேசாதிபதியாலும், வர்த்தகக் நிறுவனத்தாலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்காலமே ‘இரட்டை ஆட்சி’ எனப்படுகின்றது.&lt;br /&gt;
* இந்த இரட்டை ஆட்சிக்காலம் [[அக்டோபர் 12]] [[1798]] திகதி முதல் [[சூன் 1]] [[1802]] திகதி வரை நீடித்தது. இக்காலத்தில் இருசாராருக்குமிடையில் அடிக்கடி முரண்பாடுகள் எழுந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஏமியன்ஸ் உடன்படிக்கையும், இலங்கை முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாக மாறியமையும்.==&lt;br /&gt;
&lt;br /&gt;
* &#039;&#039;&#039;ஏமியன்ஸ் உடன்படிக்கை&#039;&#039;&#039; என்பது பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்திற்கும், பிரித்தானிய அரசுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையாகும். இதன் பிரகாரம் [[சூன் 12]]  [[1802]] முதல் &#039;&#039;&#039;இலங்கை முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாக&#039;&#039;&#039; மாறியது.&lt;br /&gt;
* இதிலிருந்து இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் சிவில் நிர்வாகம், நீதிப்பரிபாலனம், நிர்வாகவிடயங்கள் பிரித்தானிய அரசினால் இலங்கையில் நியமிக்கப்பட்டிருந்த தேசாதிபதியால் நிறைவேற்றப்பட்டன.&lt;br /&gt;
* தேசாதிபதிக்கு ஆலோசனை வழங்க 6 பேரைக் கொண்ட ஒரு சபை அமைக்கப்பட்டிருந்தது. இச்சபையில் இராணுவத் தளபதி, குடியேற்ற நாட்டுக்காரியதரிசி, பிரதம நீதியரசர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்குறிப்பிட்ட அடிப்படையிலேயே இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி ஆரம்பமாகியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==உசாத்துணை==&lt;br /&gt;
* &#039;&#039;மெண்டிஸ், ஜீ. ஸி&#039;&#039;. நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம்,  கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி - 1969&lt;br /&gt;
* &#039;&#039;பீ. எம். புன்னியாமீன்&#039;&#039;. வரலாறு ஆண்டு 11 சிந்தனை வட்டம் 1998&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://en.wikipedia.org/wiki/History_of_Sri_Lanka#Colonial_Sri_Lanka குடியேற்ற ஆதிக்கத்தின்கீழ் இலங்கை 1]&lt;br /&gt;
* [http://en.wikipedia.org/wiki/Colonial_history_of_Sri_Lanka குடியேற்ற ஆதிக்கத்தின்கீழ் இலங்கை 2]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:பிரித்தானிய இலங்கை]]&lt;br /&gt;
[[பகுப்பு:இலங்கை அரசியல்]]&lt;/div&gt;</summary>
		<author><name>103.247.48.234</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=460569</id>
		<title>மரபுத்தொடர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=460569"/>
		<updated>2024-04-27T07:46:30Z</updated>

		<summary type="html">&lt;p&gt;103.247.48.234: துறை போதல்&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;ஒரு சொல் அல்லது சொற்றொடர், அதன் நேர்பொருளை உணர்த்தாமல் தொடரும் பயன்பாட்டில் வழிவழியாக வேறு குறிப்புப் பொருளினைத் தந்து நிற்கும்போது அவற்றை &#039;&#039;&#039;மரபுத்தொடர்&#039;&#039;&#039; அல்லது மொழி மரபு அல்லது மொழி வழக்கு அல்லது இலக்கணைத் தொடர் அல்லது சொலவடை என்பர். பிறர் அல்லது முன்னோர் ஒரு குறிப்பிட்ட தகவலை அல்லது கருத்தை தெரிவிக்கப் பயன்படுத்திய சொற்தொடரை வழிவந்தோரும் பயன்படுத்துவதால் மரபுத்தொடர் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவாக வழங்கும் தொடர்களும், வட்டாரம் தோறும் - சமூகம் தோறும் சிறுசிறு வேறுபாட்டுடன் வழங்கும் தொடர்களும் ஆக தமிழில் ஆயிரக் கணக்கான மரபுத் தொடர்கள் உள்ளன. ஆங்கிலத்தில் Idioms and Phrases என்று மரபுத் தொடர்களைச் சொல்கிறார்கள். அவற்றை Idioms என்ற ஒற்றைச் சொல்லால் குறித்தல் பொருந்தாது.&amp;lt;ref&amp;gt;{{Cite web |url=http://www.thinnai.com/index.php?module=displaystory&amp;amp;story_id=60611092&amp;amp;edition_id=20061109&amp;amp;format=html |title=மக்கள் புழங்கும் மரபுத் தொடர்கள் |access-date=2013-01-22 |archive-date=2016-03-06 |archive-url=https://web.archive.org/web/20160306041310/http://www.thinnai.com/index.php?module=displaystory&amp;amp;story_id=60611092&amp;amp;edition_id=20061109&amp;amp;format=html |url-status=dead }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== துறை போதல் ==&lt;br /&gt;
* &#039;இறக்கைகட்டிப் பறக்கறது&#039; - விரைவாக செல்வது, அல்லது விரைவாக இயங்குவது&lt;br /&gt;
* &#039;கதைகட்டி விடுதல்&#039; - தவறான ஒரு விடயத்தை ஏனையவர்களுக்கும் சொல்லி பரப்புதல்&lt;br /&gt;
* &#039;பொட்டு வை&#039; - கொலை செய்: நெற்றியில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல்.&lt;br /&gt;
* வெட்டு ஒன்று துண்டு இரண்டு - மிகவும் கண்டிப்பாக இருத்தல் அல்லது சொல்லுதல்&lt;br /&gt;
* நாவை அடக்கு - அமைதியாக, எதுவும் பேசாமல் இருத்தல்&lt;br /&gt;
* இறந்த மொழி - பேச்சு வழக்கில் இல்லாத, அல்லது பாவனையில் இல்லாத மொழி&lt;br /&gt;
* மனப்பாரம் - மிகுந்த கவலை&lt;br /&gt;
* நெஞ்சு உடைதல் / மனம் உடைதல் - மிதமிஞ்சிய விசனமடைதல் &lt;br /&gt;
* மனதை உருக்கு - அனுதாபம் கொள்ளச் செய்&lt;br /&gt;
* வாலைச் சுருட்டிக்கொண்டு போதல் / இருத்தல் - பயந்துபோய் எதுவும் சொல்லாமல் போதல் / இருத்தல்&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:நாட்டுப்புறவியல்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மொழி அடையாளங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>103.247.48.234</name></author>
	</entry>
</feed>