<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=101.212.30.157</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=101.212.30.157"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/101.212.30.157"/>
	<updated>2026-06-02T08:40:01Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE&amp;diff=463396</id>
		<title>மா. இராமையா</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%BE._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE&amp;diff=463396"/>
		<updated>2012-10-03T16:29:14Z</updated>

		<summary type="html">&lt;p&gt;101.212.30.157: உரை திருத்தம்&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039;இலக்கியக் குரிசில் முனைவர் மா. இராமையா&#039;&#039;&#039; (பிறப்பு [[1930]], ஜொகூர் மாநிலம், தங்காக் நகர்) [[மலேசியா|மலேசிய]]த் தமிழ் எழுத்தாளர். &#039;&#039;சிறுகதை மன்னர்&#039;&#039; எனச் சிறப்புப் பெற்றவர். சிறந்த சொற்பொழிவாளர். தனது கதை மாந்தர்களுக்கு நல்ல இனிய தமிழ்ப் பெயர்களைச்சூட்டி, படிப்போர் கவனத்தைக் கவர்ந்தவர். தமிழ்ச்செல்வன், மலைநாடன், எம்மார்வி போன்ற புனைபெயர்களிலும் எழுதியவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வாழ்க்கை வரலாறு ==&lt;br /&gt;
[[மலேசியா]]வின் [[ஜொகூர்]] மாநிலம், தங்காக் நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இராமையாவின் பெற்றோர் சி. மாணிக்கம், பாக்கியம் ஆகியோர் ஆவர். அஞ்சல் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். [[1957]] இல் சீர்திருத்தத் திருமணம் புரிந்து கொண்டவர். மனைவி சுந்தரமேரி. ஐந்து குழந்தைகள் உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== எழுத்துலக வாழ்க்கை ==&lt;br /&gt;
[[1946]] இல் &#039;&#039;காதல் பரிசு&#039;&#039; எனும் [[சிறுகதை]]யைத் [[தமிழ் நேசன்]] இதழில் எழுதி இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தவர். இவரது படைப்புகள், மலேசிய இதழ்களிலும், தமிழகத்தில் [[சங்கொலி]], [[கல்கி]], [[மஞ்சரி]], [[அமுதசுரபி (இதழ்)|அமுதசுரபி]], தாய், டில்லி தமிழர் சங்கமலர் போன்றவற்றிலும் வெளியாகியுள்ளன. இவர் 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், 100 க்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி வந்த நூல்கள் ==&lt;br /&gt;
* &#039;&#039;மலேசிய தமிழ் இலக்கிய வரலாறு&#039;&#039; - (1978, வரலாற்றுத்தொகுப்பு)&lt;br /&gt;
* &#039;&#039;மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்&#039;&#039; - 1996, வரலாற்றுத் தொகுப்பு)&lt;br /&gt;
* &#039;&#039;இரத்ததானம்&#039;&#039; (சிறுகதைத்தொகுதி, மாயதேவன்-இராமையா கூட்டு)&lt;br /&gt;
* &#039;&#039;நீர்ச்சுழல்&#039;&#039; - (புதினம், மாயதேவன்-இராமையா கூட்டு)&lt;br /&gt;
* &#039;&#039;மூங்கிற் பாலம்&#039;&#039; - (புதினம்)&lt;br /&gt;
* &#039;&#039;எதிர் வீடு&#039;&#039; - (புதினம், தமிழகம், ராணி முத்து வெளியீடு)&lt;br /&gt;
* &#039;&#039;பரிவும் பாசமும்&#039;&#039; - (சிறுகதைத் தொகுதி, பொன்னி வெளியீடு)&lt;br /&gt;
* &#039;&#039;கவி மஞ்சரம்&#039;&#039; - (கவிதைத் தொகுப்பு)&lt;br /&gt;
* &#039;&#039;அழகின் ஆராதனை&#039;&#039; - (புதினம்)&lt;br /&gt;
* &#039;&#039;சங்கொலி சிறுகதைகள்&#039;&#039; - (சிறுகதைத் தொகுதி)&lt;br /&gt;
* &#039;&#039;சுவடுகள்&#039;&#039; - (புதினம்)&lt;br /&gt;
* &#039;&#039;சங்கமம்&#039;&#039; - (புதினம்)&lt;br /&gt;
&lt;br /&gt;
== பரிசும் பாராட்டும் ==&lt;br /&gt;
* &#039;&#039;வைரத் தோடு&#039;&#039; (1951, தமிழ் முரசு&#039; நடத்திய [[சிறுகதை]]ப்போட்டியில் - முதல் பரிசு.)&lt;br /&gt;
* &#039;&#039;சீதை&#039;&#039; (1956, சிங்கை பிரதிநிதித்துவ சபை தமிழர் திருநாளை முன்னிட்டு அகில மலாயா ரீதியில் நடத்திய [[சிறுகதை]]ப் போட்டியில் - முதல் பரிசு.)&lt;br /&gt;
* &#039;&#039;துன்பத்தின் எல்லை&#039;&#039; (1963, மலைநாடு வார இதழ் நடத்திய [[சிறுகதை]]ப் போட்டியில் - முதல் பரிசு.)&lt;br /&gt;
* &#039;&#039;ஊம்&#039;&#039; (1963, பினாங்கு புதுமைப்பித்தன் நினைவு [[சிறுகதை]]ப்போட்டியில் - முதல் பரிசு)&lt;br /&gt;
* &#039;&#039;கன்னித் தமிழென்றன் கண்&#039;&#039; என்ற ஈற்றடியை வைத்து [[நேரிசைக் கலிவெண்பா]], (1965, தைப்பிங் தமிழர் திருநாள் விழாக்குழு நடத்திய கவிதைப்போட்டியில் - முதல் பரிசு)&lt;br /&gt;
* &#039;&#039;முத்தழகு&#039;&#039; (1975, தமிழ் நேசன் நடத்திய [[குறுநாவல்]] போட்டியில் - இரண்டாம் பரிசு)&lt;br /&gt;
* &#039;&#039;மன ஊனங்கள்&#039;&#039; (1979, தமிழ் நேசன் நடத்திய [[குறுநாவல்]] போட்டியில் - இரண்டாம் பரிசு)&lt;br /&gt;
* &#039;&#039;மனக் கதவு&#039;&#039; (1990, மயில்&#039; வார இதழ் நடத்திய [[சிறுகதை]]ப் போட்டியில் - முதல் பரிசு)&lt;br /&gt;
* &#039;&#039;படிப்புக்கு ஏற்ற வேலை&#039;&#039; (1992, தமிழ் ஓசை நடத்திய பாரதிதாசன் நூற்றாண்டு விழா [[சிறுகதை]]ப் போட்டியில் - மூன்றாம் பரிசு)&lt;br /&gt;
* &#039;&#039;அழகின் ஆராதனை&#039;&#039; (1992 [[சிலாங்கூர்]] மாநிலத்தில், கூட்டரசு வளாகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய [[புதினம்]] போட்டியில் பரிசு பெற்றது.)&lt;br /&gt;
* &#039;&#039;சங்கொலி சிறுகதைகள்&#039;&#039; (1993, தமிழகம் லில்லி தேவ சிகாமணி நினைவு இலக்கியப் பரிசுகள் திட்டம் - சிறுகதைப் பிரிவில் - சிறப்புப் பரிசு)&lt;br /&gt;
* &#039;&#039;வெற்றியிலும் ஒரு தோல்வி&#039;&#039; (1994, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பேரவை நடத்திய சிறுகதைப் போட்டியில் - முதல் பரிசு&lt;br /&gt;
* &#039;&#039;ஆறு மாதங்கள்&#039;&#039; (1975, தமிழ் நேசன் பவுண் பரிசு திட்டத்தின் கீழ் நடத்திய போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றது&lt;br /&gt;
* &#039;&#039;பறி&#039;&#039; 1976, கீழ் [[பேராக்]] மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை ஆய்வில் தங்கம் வென்றது.)&lt;br /&gt;
* மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 1995ஆம் ஆண்டுவரை நடத்திய பத்து சிறுகதைப் போட்டிகளில் இருமுறை இரண்டாம் பரிசுகளும், இருமுறை மூன்றாம் பரிசுகளும், இருமுறை ஆறுதல் பரிசுகளும் பெற்றுள்ளார்.&lt;br /&gt;
* பத்துமலைத் தமிழர் திருநாள் விழாக் குழு நடத்திய சிறுகதைப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆய்வரங்கம் ==&lt;br /&gt;
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் திரு. இராமையாவின் படைப்புக்கள் மீது நடத்திய ஆய்வரங்கத்தில் (1967) வாசிக்கப்பட்ட கட்டுரைகளை &#039;&#039;மா.இராமையாவின் இலக்கியப்பணி&#039;&#039; எனும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டு இலக்கியப்பணிக்கு முத்திரையாக விளங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== விருதுகள் ==&lt;br /&gt;
* &#039;பொன்னி&#039; திங்களிதழ், 1967-ஆம் ஆண்டு வழங்கிய விருது &#039;&#039;சிறுகதை மன்னன்&#039;&#039;.&lt;br /&gt;
* சென்னை கவிஞர் பாசறை, 1978-ஆம் ஆண்டு பொன்னாடை அணிவித்து, மலர்முடி சூட்டி, மலர் செங்கோல் அளித்து வழங்கிய விருது &#039;&#039;இலக்கிய குரிசில்&#039;&#039;.&lt;br /&gt;
* மேன்மை தாங்கிய ஜொகூர் மாநில சுல்தான் 1979-ஆம் ஆண்டு, தனது பிறந்த தினத்தில், &#039;&#039;பி.ஐ.எஸ்&#039;&#039; எனும் விருதினை வழங்கி கௌரவித்தார்.&lt;br /&gt;
* 1992 இல் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் நடத்திய சோலை இருசன் மணி விழாவில் &#039;&#039;எழிற்கவி ஏந்தல்&#039;&#039; விருது வழங்கப்பட்டது.&lt;br /&gt;
* 1993 இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் &#039;&#039;பொற்கிழி&#039;&#039; அளித்து கௌரவித்தது.&lt;br /&gt;
* 1994 இல் மலேசியத் தமிழ்ப் பாவலர் மன்றம் &#039;கவிமஞ்சரம்&#039; பா தொகுதிக்காகப் &#039;&#039;பொன்னாடை&#039;&#039; போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தது.&lt;br /&gt;
* 1994 இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பேரவை தனது 6-ஆவது பேராளர் மாநாட்டில் &#039;&#039;பொன்னாடை&#039;&#039; போர்த்தி நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டியது.&lt;br /&gt;
*1994 இல் அமெரிக்கா உலகப் பல்கலைக்கழகம் இலக்கியத்துக்காக &#039;&#039;முனைவர் பட்டம்&#039;&#039; வழங்கிச் சிறப்பித்தது.&lt;br /&gt;
* 1995 இல் கோலாலம்பூர் கண்ணதாசன் பிறந்த நாள் விழாக்குழு &#039;&#039;பொன்னாடை&#039;&#039; போர்த்தி, &#039;&#039;பண முடிப்பு&#039;&#039; வழங்கிச் சிறப்பு செய்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:1930 பிறப்புகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>101.212.30.157</name></author>
	</entry>
</feed>