1928 தென்னிந்திய ரயில்வே போராட்டம்
1928 தென்னிந்திய ரயில்வே போராட்டம் (1928 South Indian railway strike) என்பது ஒரு பொதுப்போராட்டம் ஆகும். ரயில்வே துறையின் நிதிச் சுமையை குறைப்பதற்காக தென்னிந்திய ரயில்வே நிறுவனம் 3100 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதை எதிர்த்துத் தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் போராடினர். இப்போராட்டம் ஜூன் மாதம் 29 ஆம் திகதி முதல் ஆகத்து 2, 1928 வரை நடைபெற்றது. இப்போராட்டத்தினால் தென்னிந்தியா முழுவதும் பொதுமக்களின் போக்குவரத்தும், பொருட்களைக் கொண்டு செல்வதும் பெரிதும் பாதிக்கப்பட்டது. மதராஸ் அரசும் தென்னிந்திய ரயில்வே நிறுவனமும் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் அனைவரையும் கைது செய்தனர், அத்துடன் தொழிலாளர் கூட்டமைப்பின் அங்கீகாரத்தையும் ரத்து செய்தனர்.
தொழிலாளர் வேலை நீக்கத்தின் தொடக்கம்
நிகழ்வுகள்
தென் இந்திய ரயில்வே சதி வழக்கு
முதன்மைக் கட்டுரை : தென் இந்திய ரயில்வே சதி வழக்கு
இப் போராட்டங்களைத் தொடர்ந்து ஆங்கிலேய ஆட்சியாளர்களால் பொதுவுடைமைத் தலைவர்கள் மீது புணையப்பட்ட வழக்கு , தென் இந்திய ரயில்வே சதி வழக்கு என பரவலாக அழைக்கப்படுகிறது .பதினெட்டு நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120- பி மற்றும் ரயில்வே சட்டத்தின் 126 மற்றும் 128 பிரிவுகளின் கீழ் கிரிமினல் சதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.டி.கிருஷ்ணசாமி, ம.சிங்காரவேலர், முகுந்தலால் சர்க்கார் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். ஆங்கிலேய ஆட்சியின் உளவுத்துறை கம்யூனிஸ்ட்டுகளே இப்போராட்டத்தின் பின்னால் இருந்து இயக்குவதாகவும்; ஆட்சியைக் கவிழ்க்கும் சதியின் ஒரு பகுதி என்றும் குற்றம்சாட்டியது.[2]