வீ. ருக்மணி லோகநாயகி

வீ. ருக்மணி லோகநாயகி (பிறப்பு: சனவரி 31 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். இவர் 'ருக்மணி லோகா' எனும் புனைப்பெயரால் அறியப்பட்டவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1992 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் தமது அமெரிக்க, அவுஸ்திரேலிய, இந்திய, தாய்லந்துப் பயணங்கள் பற்றித் தொடர் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "எழுதுகிறாள் புதுக்கவிதை" (சிறுகதைத் தொகுப்பு, 1998)

பரிசில்களும், விருதுகளும்

தமிழர் திருநாள் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (2001).

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=வீ._ருக்மணி_லோகநாயகி&oldid=6431" இருந்து மீள்விக்கப்பட்டது