வலம்புரி சோமநாதன்
வலம்புரி சோமநாதன் (பிறப்பு: 1928) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். புதுக்கோட்டை மாவட்டம் வலையப்பட்டி எனும் வலம்புரியில் பிறந்தவர். தமிழ்த் திரைப்படத் துறையில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனங்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் வெளியான “காந்தி” திரைப்படத்திற்குத் தமிழில் மொழிமாற்றம் செய்தவர். இவர் எழுதிய “புத்த மகா காவியம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1]
வலம்புரி சோமநாதன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
'வலம்புரி' சோமநாதன் |
---|---|
பிறப்புபெயர் | சோமநாதன் |
பிறந்ததிகதி | 1928 |
பிறந்தஇடம் | வலம்புரி, புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 2010 |
பணி | பத்திரிக்கை ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் |
திரைப்படங்கள்
இயக்கம்
- லலிதா (1976)
- சிகப்புக்கல் மூக்குத்தி (1979)
தயாரிப்பு
- திருமணம் (1958)
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978)
வசனம்
- மணமகள் தேவை (1950)
- மங்கையர் திலகம் (1955)
- கானல் நீர் (1961)
மேற்கோள்கள்
- ↑ "'வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்!". தினமணி. 20 செப்டம்பர் 2012. https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2012/mar/18/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-472431.html. பார்த்த நாள்: 10 அக்டோபர் 2020.