வஞ்சி மரம்

வஞ்சி மரம்
படிமம்:Calamus rotang Ypey33.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Arecales
குடும்பம்: Arecaceae
துணைக்குடும்பம்: Calamoideae
சிற்றினம்: Calameae
பேரினம்: Calamus
இனம்: C. rotang
இருசொற் பெயரீடு
Calamus rotang
லின்.

வஞ்சி என்பது ஒரு வகை மரம்.[1][2][3] இம்மரம் 10 மீட்டர் வரை வளரும். இம்மரமானது குடைகள், நாற்காலிகள் முதலியன செய்ய பயன்படுகிறது. இதன் பழங்கள் சாப்பிடக்கூடியவையாக இருக்கிறது.

வஞ்சி என்பது குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று.[4]

புறமதிலுக்கு வெளியே வஞ்சிமரம் இருந்ததால் வஞ்சிமாநகரம் 'வஞ்சி' எனப் பெயர்பெற்றது.[5]

வஞ்சிமரத்துக்கும், வஞ்சிமாநகருக்கும் வேறுபாடு தெரிவதற்காக வஞ்சிமாநகரம் 'பூவா வஞ்சி' எனப் போற்றப்பட்டது.[6]

அடிக்குறிப்பு

  1. வஞ்சிக்கோடு புறம் 384
  2. வஞ்சி ஓங்கிய யாணர் ஊர - ஐ 50
  3. அகம் 226
  4. குறிஞ்சிப்பாட்டு 89
  5. புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல் என் பொருநை - புறம் 387
  6. பூவா வஞ்சி - புறம் 32-2
தமிழர்விக்கி பொதுவகத்தில்,
வஞ்சி (மரம்)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வஞ்சி_மரம்&oldid=11468" இருந்து மீள்விக்கப்பட்டது