பொன். செல்வராசா

பொன்னம்பலம் செல்வராசா (Ponnambalam Selvarasa) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

பொன். சென்வராசா
இலங்கை நாடாளுமன்றம்
for மட்டக்களப்பு மாவட்டம்
பதவியில்
1994–2000
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 25, 1946 (1946-07-25) (அகவை 78)
அரசியல் கட்சிஇலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வாழிடம்(s)68 ஸ்டேசன் வீதி, மட்டக்களப்பு, இலங்கை
வேலைஇளைப்பாறிய அரசுப் பணியாளர்
இனம்இலங்கைத் தமிழர்

அரசியலில்

செல்வராசா தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[1] 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

2001 ஆம் ஆண்டில் தவிகூ, தமிழ் காங்கிரசு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற அரசியல் கூட்டணியை நிறுவினர். செல்வராசா மட்டக்களப்பு மாவட்டத்தில் ததேகூ சார்பில் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பொன்._செல்வராசா&oldid=24302" இருந்து மீள்விக்கப்பட்டது