தீட்சிதா மாணிக்கம்

தீட்சிதா மாணிக்கம் (Deekshitha Manikkam) தமிழ் திரைப்படங்களில் தோன்றிய ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். "கேரள நாட்டிளம் பெண்களுடனே" (2014) என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான பிறகு, இவர், நஸ்ரியா நசீம் உடன் இணைந்து திருமணம் எனும் நிக்காஹ் (2014) படத்திலும்,[1] [2] "ஆகம்" (2016) , "நகர்வலம்"[3] [4] உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். [5]

தீட்சிதா மாணிக்கம்
பிறப்புசென்னை, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2014–2017

பின்னணி

சென்னையில் பிறந்த தீக்சிதா, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், மிஸ் தென்னிந்தியா என்ற அழகிப் போட்டியின் இறுதிப் போட்டியாளராகப் பங்கேற்பதற்கு முன், ஹேப்பி டு பீ சிங்கிள் என்ற வலைத் தொடரிலும் இடம் பெற்றார்.

செப்டம்பர் 2017 இல், இவர் இசையமைப்பாளர் தரண் குமாரை மணந்தார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தீட்சிதா_மாணிக்கம்&oldid=22931" இருந்து மீள்விக்கப்பட்டது