ஜோயசிறீ கோசுவாமி மகந்தா
ஜோயசிறீ கோசுவாமி மகந்தா (Joyasree Goswami Mahanta) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் அசாம் கண பரிசத்தின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையினை அசாம் சார்பில் 1999 முதல் 2001 வரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2] இவர் ஓர் அசாமி எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவருக்கு 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை இந்திய அரசு வழங்கியது.[3]
ஜோயசிறீ கோசுவாமி மகந்தா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1999-2001 | |
தொகுதி | அசாம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1 சனவரி 1960 |
அரசியல் கட்சி | அசாம் கண பரிசத் |
வாழ்க்கை துணைவர்(கள்) | பிரபுல்ல குமார் மகந்தா |
விருதுகள் | பத்மசிறீ, 2018 |
மேற்கோள்கள்
- ↑ "Rajya Sabha Members Biographical Sketches 1952–2003". Rajya Sabha. http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/m.pdf.
- ↑ "Women Members of Rajya Sabha". Rajya Sabha. http://rajyasabha.nic.in/rsnew/publication_electronic/Women_Members_Rajya%20Sabha.pdf.
- ↑ "Padma Shri honour for nine achievers from northeast". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 January 2018. https://timesofindia.indiatimes.com/city/guwahati/padma-shri-honour-for-nine-achievers-from-northeast/articleshow/62679552.cms.