ஜும்ஆ (சிற்றிதழ்)

ஜும்ஆ இலங்கையின் தென்மாகாணத்தைச் சேர்ந்த பலப்பிட்டிய எனுமிடத்திலிருந்து 1977ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்

  • பலப்பிட்டி - அரூஸ். இவர் "பலப்பிட்டி அரூஸ்" என்று அறியப்பட்டவர்

பொருள்

'ஜும்ஆ' என்ற அரபுப் பதம் 'ஒன்றுகூடும் நாள்' என்ற பொருளைத் தரும்.

உள்ளடக்கம்

ஜும்ஆ சிற்றிதழ் [இலங்கை] இஸ்லாமிய செய்திகளையும், செய்தி விமர்சனங்களையும், இஸ்லாமிய இலக்கிய ஆக்கங்களையும் கொண்டிருந்தது. இவ்விதழில் பணியாற்றவென நாடளாவிய ரீதியில் பல நிருபர் நிறுத்தப்பட்டிருந்தனர். இதன் காரணத்தினால் இலங்கை பூராவுள்ள இஸ்லாமிய செய்திகளை திரட்டிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இவ்விதழ் ஆசிரியருக்கு காணப்பட்டது.

இணைய முகவரி

"https://tamilar.wiki/index.php?title=ஜும்ஆ_(சிற்றிதழ்)&oldid=14783" இருந்து மீள்விக்கப்பட்டது