சத்ய பிரதா சாகு
சத்ய பிரதா சாகு (Sathya Pratha Sahoo) தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ஆவார். இவர் 2018 பிப்ரவரி 22 முதல் தமிழகத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். 2018 மார்ச் 15 ஆம் நாள் இப்பணியை ஏற்றுக்கொண்டார்.[1] இவர் 1997 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஆவார். இவர் ஒடிசா மாநிலத்தைச் சார்ந்தவர் ஆவார். முன்னதாக இவர் சென்னைப் பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.[2] நாடாளுமன்றத்திற்கும், தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டால் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.[3] இவருக்கு முன்னதாக தமிழக தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லகானி பதவியில் இருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ "NAMES OF CHIEF ELECTORAL OFFICERS OF TAMIL NADU". Election Commission of India. http://www.elections.tn.gov.in/Reports/NAMES%20OF%20CHIEF%20ELECTORAL%20OFFICERS%20OF%20TAMIL%20NADU.pdf. பார்த்த நாள்: 3 பெப்ரவரி 2019.
- ↑ "தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்". தினமலர். 22 பிப்ரவரி 2018. https://www.dinamalar.com/news_detail.asp?id=1964923. பார்த்த நாள்: 31 சனவரி 2019.
- ↑ ""எப்போது தேர்தல் அறிவித்தாலும் நடத்த தயார்" - தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்". தந்தி தொலைக்காட்சி. 25 சனவரி 2019. https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/25155335/1022980/tamilnadu-politics-election2019.vpf. பார்த்த நாள்: 31 சனவரி 2019.