க. விநாயகம்

க. விநாயகம் (பிறப்பு: 1951) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர்[1]. முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் திண்டிவனம், மயிலம் கல்லூரியில் 33 ஆண்டுகள் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றியவர்[2]. 15க்கும் அதிகமான நூல்களையும், பற்பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய “மாணிக்கவாசகரும் சிவப்பிரகாசரும்” [3] எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது[4].

க. விநாயகம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
க. விநாயகம்
பிறந்ததிகதி 1967
தேசியம் இந்தியா
அறியப்படுவது எழுத்தாளர்

ஆதாரம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=க._விநாயகம்&oldid=3688" இருந்து மீள்விக்கப்பட்டது