இல்பொருள் உவமையணி

இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.

எடுத்துக்காட்டு

அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை

வன்பால் கண் வற்றல் மரம் தளிர்த்தற்று


திருக்குறள்-78.

விளக்கம் :

அதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது.

இங்கே வலிமையான பாலைவனத்தில் பட்டமரம் தளிர்ப்பது என்பதே அன்பில்லா வாழ்க்கைக்கு உவமையாகக் காட்டப்படுகிறது. வலிமையான பாலைவனத்தில் பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அப்படியொரு நடக்க முடியாத அல்லது இல்லாத ஒரு விடயத்தை உவமையாகக் காட்டுவதே இல்பொருள் உவமையணி

"https://tamilar.wiki/index.php?title=இல்பொருள்_உவமையணி&oldid=13503" இருந்து மீள்விக்கப்பட்டது