ஆர். சண்முகசுந்தரம் (வழக்கறிஞர்)

இராஜகோபால் சண்முகசுந்தரம் என்பவர் தமிழக அரசுத் தலைமை வழக்கறிஞராக உள்ளவராவார்.[1] திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1953 இல் பிறந்தவரான சண்முக சுந்தரம் 1977இல் வழக்கறிஞராக பதிவு செய்தார். 1989 -1991 இல் திமுக ஆட்சியில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும், 1996-2001 திமுக ஆட்சியில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றி அரசு வழக்கறிஞராக அனுபவம் பெற்றவர்.[2][3] இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டு 2002-2008 காலகட்டத்தில் இருந்தார். 1995 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி ஜெயலலிதா மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப் போகும் போது இவர் தாக்கப்பட்டார். "வெல்டிங் "குமார் மற்றும் 6 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதற்குதண்டனை பெற்றனர்.[4][5][6]

ஆர். சண்முகசுந்தரம்
தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
முன்னையவர்விஜய் நாராயண்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
2002-2008
தொகுதிதமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 அக்டோபர் 1953 (1953-10-29) (அகவை 70)
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
மூலம்: [1]

குறிப்புகள்