ஆர். எம். சுப்பிரமணி
ஆர். எம். சுப்பிரமணி மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். காப்புறுதி முகவரான இவர் ஆர். எம். எஸ். பாரதிரமணி எனும் புனைப்பெயரில் எழுத்துத்துறையில் அறியப்பட்டனவர். மேலும் இவர் ஒரு வானொலி மற்றும் மேடை நாடகக் கலைஞருமாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1965 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.