ஆனந்தாஸ்ரமம்

ஆனந்தாஸ்ரமம் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஆனந்தாஸ்ரமம்
இயக்கம்சி. வி. ராமன்
தயாரிப்புசேலம் ஸ்ரீரங்கர் பிலிம்சு
நடிப்புசி. வி. வி. பந்துலு
என். எஸ். கிருஷ்ணன்
பி. வி. ரெங்காச்சாரி
எஸ். எஸ். கொக்கோ
ஆர். பி. லட்சுமிதேவி
டி. ஏ. மதுரம்
வெளியீடுசூலை 30, 1939
நீளம்18500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதை

மந்திரியின் சொல்கேட்டு கொடுங்கோலனாக ஆட்சி செய்யும் மன்னனை எதிர்க்கும் கதாநாயகனை (சி. வி. வி. பந்துலு) இளவரசி (ஆர். பி. லட்சுமிதேவி) காதலிக்கிறாள். மந்திரி இளவரசியைத் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க சூழ்ச்சி செய்கிறான். கதாநாயகன் மந்திரியால் நாடு கடத்தப்படுகிறான். காட்டில் யோகி ஒருவர் (எஸ். என். சுப்பையா) நாயகனுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். இறுதியில் மன்னன் திருந்துகிறான்.[2]

நடிகர்கள்

பாடல்கள்

  • மனம்தான் வசப்படுமோ (பாடியவர்: எஸ். என். சுப்பையா)[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஆனந்தாஸ்ரமம்&oldid=30666" இருந்து மீள்விக்கப்பட்டது