தாராசங்கர் பந்தோபாத்தியாய்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தாராசங்கர் பந்தோபாத்தியாய்
இயற்பெயர் தாராசங்கர் பந்தோபாத்தியாய்
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
பிறந்ததிகதி 23 சூலை 1898
பிறந்தஇடம் இலாப்புர், பைர்பூம் மாவட்டம், வங்காளம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு 14 செப்டம்பர் 1971
பணி புதின எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க விருதுகள் இரபிந்தர புரசுகர் விருது
சாகித்திய அகாதமி விருது
ஞானபீட விருது
பத்ம பூசன்

தாராசங்கர் பந்தோபாத்தியாய் (Bengali: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়) (23 சூலை 1898[1] – 14 செப்டம்பர் 1971) என்பவர் முன்னணி வங்காள எழுத்தாளர் ஆவார். இவர் 65 புதினங்களையும், 53 கதைகளையும், 12 நாடகங்களையும், 4 கட்டுரை நூல்களையும், 4 வாழ்க்கை வரலாறுகளையும், 2 பயணக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.[2] இவரின் சிறந்த எழுத்துப் பணிகளைப் பாராட்டி இரபிந்தர புரசுகர் விருது சாகித்திய அகாதமி விருது, ஞானபீட விருது, பத்ம பூசன் ஆகிய இந்திய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவரது நூல்களில் சிலவற்றை த. நா. சேனாபதி மற்றும் த. நா. குமாரசாமி ஆகியோர் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளனர்.

மேற்கோள்கள்