இ. சி. இரகுநாதையர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இ. சி. இரகுநாதையர் 1667 இல் இலங்கையில் முதன்முதலாக வாக்கிய பஞ்சாங்கத்தைக் கணித்து வெளியிட்டவரான இராமலிங்க முனிவரின் வழி வந்தவர். இவரது பாட்டனாரான சந்திரசேகர ஐயர் இரகுநாதையர் காலயுக்தி வருடம் (1858 - 1859) முதலும், பின்னர் இவரது தகப்பனார் இ. சிவராமலிங்கையர் ஜய வருடம் (1894 - 1895) முதலும் கணித்து வெளியிட்டுவந்த இப் பஞ்சாங்கத்தைப் பொறுப்பேற்று, விக்கிரம வருடம் (1940 - 1941) முதல் குரோதி வருடம் (1964 - 1965)வரை கணித்து வெளியிட்டார். இவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்தவர்.

இவரது தந்தையார் காலத்தில் நிறுவப்பட்ட சோதிடப் பிரகாச அச்சியந்திரசாலை மூலமாகப் பஞ்சாங்கத்தை அச்சிட்டு வெளியிட்டு வந்தது மட்டுமன்றி வேறு பல நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

பதிப்பித்த நூல்கள்

  • ஆசௌச தீபிகை
  • சுப்பிரமணியர் கவசம்
  • சந்தான தீபிகை பொழிப்புரை (1940)
  • சனிதுதி
  • சிவசிராத்த விதி
  • சிவாலய தரிசனவிதி
  • செகராசசேகரமாலை தமது உரையுடன் (1942)
  • நல்வழி, (தத்துவார்த்த விளக்கவுரையுடன்)

வெளி இணைப்பு

"https://tamilar.wiki/index.php?title=இ._சி._இரகுநாதையர்&oldid=2450" இருந்து மீள்விக்கப்பட்டது