அ. பழனியாண்டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அ. பழனியாண்டி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'சின்னரூணா' எனும் புனைப்பெயரில் நன்கறியப்பட்ட இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1977 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் சிறுகதைகள், தொடர் கதைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "நிலவுக்கு எட்டாத வானம்" (சிறுகதைகள்)
  • "சிந்தனைக் கனல்" (கவிதைகள்)
  • "சின்ன மலர்கள்" (சிறுவர் பாடல்கள்)
  • "தமிழைப் பிழையற எழுதுவோம்" (இலக்கண நூல்).

பரிசில்களும், விருதுகளும்

மலாயாப் பல்கலைக் கழகப் பேரவைச் சிறுகதைப் போட்டி உட்படப் பல சிறுகதை, கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=அ._பழனியாண்டி&oldid=6085" இருந்து மீள்விக்கப்பட்டது