அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான் (கி.பி 17 ஆம் நூற்றாண்டு) என்பவர் ஒரு தமிழ் புலவர், தருமபுரி ஆதீனகர்த்தர் ஆவார்.[1] இவர் சைவ சமய நூல்கள் பல நூல்களை இயற்றியுள்ளார். கிளி விடு தூது நூலை ஆசிரியரான திருவம்பல தேசிகரின் மேல் பாடினார்.

வாழ்க்கை குறிப்பு

அழகிய திருச்சிற்றம்பல அடிகள் தமிழ்நாட்டின், காவிரியின் தென்கரையில் உள்ள திருவம்பர்மா காளத்தைச் சேர்ந்த மாகாள இலந்துறையில் பிறந்தார். இளமையில் தருமபுரி ஆதீனத்தில் திருவம்பல தேசிகரிடம் மாணவராகச் சேர்ந்து அவரிடம் தீட்சை பெற்றுக்கொண்டார். தருமபுரி ஆதீனத்தின் எட்டாவது பட்டம் பெற்றார். திருவம்பல தேசிகரின் ஆணைப்படி சொர்க்கபுரம் என்னும் ஊரில் ஒரு மடம் நிறுவினார். அந்த மடத்திற்கு தஞ்சாவூர் மராத்திய மன்னர்களான பாபு சாகேப் ஏகோஜி, அரசி கஜானாபாயி, இரத்ணாம் சரபோஜி ஆகியோர் மடத்துக்கு மானியங்களையும், நிலங்களையும் அளித்துள்ளனர்.

படைப்புகள்

  • கிளி விடு தூது
  • அறிவானந்த சரித்திரம்
  • வினாவுரை
  • திரிபதார்த்த தீபம்
  • சித்தார்த்த நிச்சயம்
  • அநுட்டான விதி
  • உசாத்தானத் தோத்திரம்
  • அருட்பாமாலை

மறைவு

இவர் 1748-ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இறந்தார்.

குறிப்புகள்